| | பேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை, - வாச மாலையாய்! - யாவரே முடிவு எண்ண வல்லார்? |
வாச மாலையாய் -மணம் நிறைந்த மாலையை அணிந்தவனே!ஈசன் மேனியை -இறைவனின் திருமேனியையும்;ஈர் ஐந்து திசைகளை -பத்துத் திக்குகளையும்;ஐம்பெரும் பூதத்தை -ஐந்த பெரிய பூதங்களையும்;அறிவை -நுட்பமான அறிவையும்;பேசும் பேச்சினை -பேசும் மொழிகளையும்; சமயங்கள் பிணக்குறும் பிணக்கை -தமக்குள் சமயங்கள் மாறுபடுகின்ற மாறுபாட்டையும்;ஈண்டு இவ் ஆசு இல் சேனையை - இங்கே திரண்டுள்ள குற்றமற்ற இவ்வானரப் படையையும்;யாவரே முடிவு எண்ண வல்லார் - எவர்தாம் அவற்றின் முடிவைக் கணக்கிட வல்லவர்? உபமேயமாகிய சேனையையும் உவமானமாகிய ஈசன்மேனி முதலியவற்றையும் ஒருங்கே ஒரு பொதுத் தன்மையைக் கொண்டு முடியுமாறு கூறப்பட்டுள்ளது. இறைவன் எங்குமுள்ளவனாதலால் அவனது திருமேனி அளவிட்டு அறிய முடியாதது; ஐம்பெரும் பூதங்கள் உலக முழுவதும் நிம்பியிருத்தலால் அவற்றிற்கும் ஓர் அளவு இல்லை;புதிது புதிதாகப் பொருள்களை அறியும் அறிவுக்கும் ஓர் எல்லையில்லை; ஒருவர் ஒன்று பேசும்போது அதனைத் தொடர்ந்து பேசு இடம் உண்டாதலால் அதற்கும் ஓர் அளவில்லை. தன் தெய்வம் என் தெய்வம் என்று பேசிச் சழக்கிடும் சமய வாதங்களுக்கும் முடிவில்லை. இவற்றைப் போலவே வானரப் படையின் அளக்கமுடியாத நிலை இங்கே காட்டப்பெற்றுள்ளது. 36 | 4443. | 'இன்ன சேனையை, முடிவுற இருந்து இவண் நோக்கி, பின்னை காரியம் புரிதுமேல், நாள் பல பெயரும்; உன்னி, செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி' என்ன - வீரனைக் கைதொழுது, இளையவன் இயம்பும்: |
இன்ன சேனையை -இத்தகைய படையை;இவண் இருந்து முடி வுற நோக்கி -இங்கேயிருந்து முழுவதும் நன்றாகப் பார்த்து;பின்னை -அதன் பின்பு;காரியம் புரிதுமேல் -(நமது) செயலைச் செய்யத் தொடங்குவோமானால் (இதைப் பார்த்து முடிவதற்குள்);நாள் பல பெயரும் - பல நாட்கள் கழிந்து விடும்;உன்னி -(ஆகவே இனிச் செய்ய வேண்டியவற்றை) நன்றாக ஆராய்ந்து;செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி -செய்யவேண்டிய செயலில் மனம் ஒன்று பட்டுச் செய்ய முற்படுவதே நன்மை தருவதாகும்;என்ன -என்று (இராமன் |