பக்கம் எண் :

நாட விட்ட படலம் 533

இடமானதுமாகிய;பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் -பாண்டு மலை
என்னும் மலை(யுள்ளது) (அதைச் சென்றடையுங்கள்.)

     பாண்டுமலை மிகவுயர்ந்து மிக இனிமையான இடடாயிருத்தலால்
கதிரவனும் அங்கே தங்கி அப்பாற் செல்லக் கருதுகின்றான் என்பது.
பருப்பதம் - பர்வதம் என்ற வடசொல் திரிபு.                        20

ஆசிரிய விருத்தம்

4467.'முத்து ஈர்த்து, பொன் திரட்டி, மணி உருட்டி,
     முது நீத்தம் முன்றில் ஆயர்
மத்து ஈர்த்து, மரன் ஈர்த்து, மலை ஈர்த்து,
      மான் ஈர்த்து, வருவது; யார்க்கும்
புத்து ஈர்த்திட்டு அலையாமல், புலவர் நாடு
      உதவுவது; புனிதம் ஆன
அத் தீர்த்தம் அகன் கோதாவரி என்பர்;
      அம் மலையின் அருகிற்று அம்மா!

     முது நீத்தம் -பழமையான வெள்ளமானது;முத்து ஈர்த்து -
முத்துக்களை இழுத்துக் கொண்டும்;பொன் திரட்டி -பொன் துகள் களைச்
சேர எடுத்துக் கொண்டும்;மணி உருட்டி -இரத்தினக் கற் களையடித்துக்
கொண்டும்;ஆயர் முன்றில் மத்து ஈர்த்து -இடையர் களின்
முற்றங்களிலுள்ள மத்துக்களை இழுத்துக்கொண்டும்;மரன் ஈர்த்து -
மரங்களையிழுத்துக் கொண்டும்;மலை ஈர்த்து -கற்பாறைகளைப் புரட்டி
இழுத்துக் கொண்டும்;மான் ஈர்த்து -மிருகங்களை இழுத்துக் கொண்டும்;
வருவது -
பெருகிவரும் தன்மையுடையது;யார்க்கும் -(அதில் மூழ்கிய)
எல்லோர்க்கும்;புத்து ஈர்த்திட்டு -'புத்' என்னும் நரகம் வராமல் நீங்கி;
அலையாமல் -
எங்கும் அலைந்து திரியாமல்;புலவர் நாடு உதவுவது -
தேவருலகத்தைத் தர வல்லது;புனிதம் ஆன அத் தீர்த்தம் -தூய்மையான
அந்தப் புண்ணிய நீரின் பெயர்;அகல் கோதாவரி என்பர் -அகலமான
கோதாவரிநதியென்று சொல்லுவர்;அம்மலையின் அருகிற்று -(அந்த நதி)
அப் பாண்டு மலையின் பக்கத்தேயுள்ளது.

     அம்மா: வியப்பிடைச்சொல்.

     ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றான கோதாவரியின் பல சிறப்புகளையும்
கூறுவது இப்பாடல்.  முதுநீத்தம்: பழமையும் பெருமையும் வாய்ந்ததால் 'புத்'
என்பது பிள்ளைகளைப் பெறாதவர்கள் சென்றடையும் ஒரு நரகம் என்பர்.
முன்றில்: இலக்கணப் போலி. 'ஈர்த்து' என்ற சொல் ஒரு பொருளிலே பலமுறை
வந்தது: சொற்பொருள் பின்வருநிலையணி.                           21

4468.'அவ் ஆறு கடந்து அப்பால், அறத்து ஆறே
      எனத் தெளிந்த அருளின் ஆறும்,