| | புன்தொழில் இறுதி ஆக, புகுந்த உள பொருள்கள் எல்லாம், ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல், உணர்த்தினன்; உணர்த்தக் கேட்டு நின்ற அக்காலின் மைந்தன், நெடிது உவந்து, அடியில் தாழ்ந்தான். |
என்று - என்று இவ்வாறு;அவன் தோற்றம் ஆதி -இராமபிரானின் பிறப்பு முதல்;இராவணன் இழைத்த- இராவணன் செய்த;மாயப் புன்தொழில் இறுதி ஆக -வஞ்சனையாகிய கீழ்த்தரமான செயல் ஈறாக; புகுந்து உள பொருள்கள் எல்லாம் -நடந்துள்ள செய்திகளையெல்லாம்; ஒன்றும் ஆண்டு ஒழிவு உறாமல் -எந்த ஒரு நிகழ்ச்சியும் விடுபட்டுப் போகாமல்;உணர்த்தினன் -எடுத்துரைத்தான்;உணர்த்த -அவ்வாறு சொல்ல;கேட்டு நின்ற-கேட்டுக் கொண்டு நின்ற;அக்காலின் மைந்தன்- காற்றின் மைந்தனாகிய அந்த அனுமான்;நெடிது உவந்து-பெரிதும்மகிழ்ந்து; அடியில் தாழ்ந்தான் - இராமபிரான் திருவடிகளில் விழுந்து வணங்கினான். இராவணன் இழைத்த மாயப் புன்தொழில் - வஞ்சனையால் சீதையைக் கவர்ந்த செயல். சீதையைக் கவர்ந்த செயலைக் கூறவும் விரும்பாததால் கம்பர் 'மாயப்புன் தொழில்' எனக் குறித்தார். இலக்குவன் கூறிய வரலாற்றால் இராமன் வணங்கத்தக்க குணங்களை உடையவன் என அனுமன் அறிந்ததால் நெடிது மகிழ்ந்து அவனது திருவடிகளில்வணங்கினான். 29 'மறைவனாகிய அனுமன் வணங்குவது முறையோ'? என்ற இராமனுக்கு அனுமன் மறுமொழி | 3780. | தாழ்தலும்,'தகாத செய்தது என்னை, நீ? தருமம் அன்றால்; கேள்வி நூல் மறைவலாள!' என்றனன்; என்னக் கேட்ட பாழி அம் தடந் தோள் வென்றி மாருதி, 'பதுமச் செங்கண் ஆழியாய்! அடியனேனும் அரிக் குலத்து ஒருவன்' என்றான். |
தாழ்தலும் - (அனுமன் தன்னை) வணங்கிய அளவில்;கேள்வி நூல் மறை வலாள -(இராமன் அனுமனை நோக்கி) கேட்டறிந்த சாத்திரங்களிலும் வேதங்களிலும் வல்ல அந்தணனே! நீ - -;தகாத செய்தது என்னை?- செய்யத்தகாத காரியத்தைச் செய்தது ஏன்? தருமம் அன்று -(அந்தணன் அரசனை வணங்குதல்) தருமம் அன்று; என்றனன் -என்று கூறினனாக; என்னக் கேட்ட -அவ்வாறு கூறியதைக் கேட்ட;பாழி அம் தடந்தோள்- வலிமையான அழகிய பெரிய |