தோள்களை உடைய;வென்றி மாருதி - வெற்றிமிக்க அனுமன்;பதுமச் செங்கண் ஆழியாய் -'செந்தாமரை மலர்போன்ற சிவந்த கண்களையும் ஆணைச் சக்கரமும் உடையவனே! அடியனேனும் - அடியனாகிய யானும்; அரிக்குலத்து ஒருவன் - குரங்குக் குலத்தில் தோன்றிய ஒருவனே யாவேன்; என்றான் -என்று கூறினான். நால்வகை வருணத்தோருள் அந்தணர் உயர்ந்தோராகக் கருதப்பட்டதால் அந்தணனாகிய அனுமன் அரசனாகிய தன்னை வணங்குதல் தகாது; தருமம் ஆகாது என்றனன் இராமன். அனுமன் அந்தணன் வேடத்தில் இருந்தமையால் இராமன் இங்ஙனம் கூறினான். கேள்வி நூல் - வேதம்; சுருதி. செவி வழியாக மட்டும் கேட்கப்படுதலின் வேதத்தைக் கேள்வி நூல் என்பது பழ மரபு. கேட்டற்கரிய நூற்பொருளைக் கற்றறிந்தார் வழிக்கேட்டலும் ஆம். 'கற்றிலனாயினும் கேட்க' என்றார் வள்ளுவரும். (குறள். 414). மறை - வேதம். மருத்துவின் மகனாதலின் 'மாருதி' என்பது அனுமன் பெயராயிற்று. ஆழியாய் - ஆணைச் சக்கரம் உடையவனே என்பது பொருள். தயரத சக்கரவர்த்தியின் மகனாதலின் காடாளும் இராமனை இங்ஙனம் அனுமன் விளித்தான். அடியேன் தானும் - உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. சுக்கிரீவனே அன்றி யானும் எனப் பொருள்படும். ஆல் - அசை. 30 அனுமன் தன் பெரிய வானர உருவத்துடன் நிற்றல் | 3781. | மின்உருக் கொண்ட வில்லோர் வியப்புற, வேத நல் நூல் பின் உருக்கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ, பொன் உருக் கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத் தன் உருக்கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான். |
தருமத்தின் தனிமை தீர்ப்பான்- (துணையின்றி வருந்தும்) தருமத்தின் தனிமையைப் போக்க வந்தவனாகிய அனுமன்;மின் உருக் கொண்ட - மின்னலின் வடிவத்தைத் தன்பால் கொண்டாற்போன்ற ஒளிபொருந்திய; வில்லோர் வியப்புற-வில்லேந்திய இராமலக்குவர் வியப்படையுமாறு;வேத நல்நூல் - வேதம் முதலான சாத்திரங்களே;பின் உருக் கொண்டது என்னும் -பின்னர் ஒரு வடிவம் எடுத்து வந்தது என்று;பெருமை ஆம் பொருளும் தாழ -சிறப்பித்துச் சொல்லும் பாராட்டுரையும் சிறுமையுறும்படி; பொன் உருக் கொண்ட மேரு - பொன் மயமான வடிவங் கொண்ட மேருமலையும்;புயத்திற்கு உவமை போதா - தன் தோள்களுக்கு உவமையில் ஒப்பாகாத;தன் உருவக்கொண்டு நின்றான் - தன்னுடைய பேருருவத்தைக் கொண்டு நின்றான். 'இவர்களோ தருமம் ஆவார்' (3762) என்ற தொடர்களில் இராமலக்குவர் குறிக்கப்பட்டனர். அவர்களின் தனிமை தீர்ப்பவன் ஆதலின், அனுமன் தரு |