பக்கம் எண் :

562கிட்கிந்தா காண்டம்

பருமையாகப் பனிச்சைக் கொண்டை முதலியனவாகச் செய்வதாகலின்
'நேர்மையைப் பருமை செய்த' என்றான்.  நீத்தம்: கூந்தல் தொகுதியைக்
குறித்தது.  சும்மை - சுமை என்பதன் விரித்தல்.  ஆவி: நறும்புகை. உறீஇ -
உறுவித்து; பிறவினையெச்சம்.                                    59

4506.'புல்லிதழ் கமலத் தெய்வப்
      பூவிற்கும் உண்டு; பொற்பின்
எல்லையின் மதிக்கும் உண்டாம், களங்கம்
      என்று உரைக்கும் ஏதம்;
அல்லவும் சிறிது குற்றம்
     அகன்றில; அன்னம் அன்ன
நல் இயலாளுக்கு, எல்லாம் நலன்
      அன்றி, பிறிது உண்டாகுமோ?    *

     தெய்வக் கமலப் பூவிற்கும் -தெய்வத் தன்மையுள்ள தாமரைப்
பூவிற்கும்;புல்லிதழ் உண்டு -பயனற்றதான (அதனை மேலே தழுவியுள்ள)
புறவிதழாகிய குற்றமுண்டு;பொற்பின் எல்லையின் மதிக்கும் -அழகின்
வரம்பாகிய சந்திரனுக்கும்;களங்கம் என்று உரைக்கும் ஏதம் -
களங்கமென்று சொல்லுகின்ற குற்றம்;உண்டாம் -உள்ளதாகும்;அல்லவும் -
இவை அல்லாமல் மற்றுமுள்ள சிறந்த பொருள்களும்;சிறிது குற்றம்
அகன்றில -
சிறிதளவாவது  குற்றம் இல்லாமல் இருக்கமாட்டா (ஒவ்வொரு
பொருளுக்கும் ஓரளவாவது குற்றம் உண்டு);அன்னம் அன்ன நல்
இயலாளுக்கு -
அன்னப் பறவை போன்ற அழகிய நடையையுடையவளாகிய
சீதைக்கு;எல்லாம் நலன் அன்றி -முழுவதும் நன்மையேயல்லாமல்;பிறிது
உண்டாமோ -
வேறொன்றாகிய குற்றம் உண்டோ? (இல்லை என்றவாறு).
ஆல் - தேற்றம்.                  

     தாமரைமலர்க்கும் புறவிதழாகிய குற்றமுள்ள; சந்திரனுக்கும் களங்கமாகிய
குற்றம் இருக்கின்றது; இவ்வாறு. பல சிறப்பான குணங்களையுடைய உயர்ந்த
பொருள்களிலும் ஏதேனும் குற்றம் இருத்தல் உலகவியல்பு: ஆனால் இச்
சீதைக்கோ முழுவதும் குணமேயன்றிக் குற்றம் சிறிதுமில்லை என்பது.
எடுத்துக் காட்டுவமையணி.  திருமகள் தன்னிடத்தில் தங்குமாறு நிற்றலால்
தாமரை மலரை 'கமலத் தெய்வப்பூ' என்றார்.  புல்லிதழ் - பண்புத் தொகை.
                                                           60

4507.'மங்கையர்க்கு ஓதி வைத்த
      இலக்கணம், வண்ண வாசப்
பங்கயத் தவட்கும், - ஐயா! -
      நிரம்பல; பற்றி நோக்கின்,
செங் கயல் கருங்கண் செவ்
      வாய்த் தேவரும் வணங்கும் தெய்வக்
கொங்கை அக் குயிலுக்கு ஒன்றும்
     குறைவு இலை; குறியும் அஃதே.