பக்கம் எண் :

நாட விட்ட படலம் 563

     ஐயா -ஐயா!பற்றி நோக்கின் -ஆராய்ந்துபார்த்தால்;மங்கையர்க்கு
ஓதி வைத்த இலக்கணம் -
பெண்களுக்காகக் (அங்க இலக்கண நூலில்)
கூறியுள்ள உத்தமவிலக்கணங்கள்;வண்ண வாசப் பங்கயத்த வட்கும் -
மணமுள்ள அழகிய தாமரை மலரில் வாழ்பவளான திரு மகளுக்கும்;நிரம்பல
-
நிரம்ப அமையவில்லை;செங்கயல் கருங்கண் -கயல்மீன்போன்ற அழகிய
கருவிழிகளைக் கொண்ட கண்களையும்;செவ் வாய் -சிவந்த
வாயையுமுடைய;தேவரும் வணங்கும் -தேவரும் வணங்குதற்கேற்ற சிறப்பு
வாய்ந்த;தெய்வக் கொங்கை அக் குயிலுக்கு -தெய்வத் தன்மை கொண்ட
முலைகளோடு கூடிய அந்தக் குயில் போன்ற சீதைக்கு;ஒன்றும் குறைவு
இலை -
(உத்தமவிலக் கணங்களில்) ஒன்றாவது குறைவுபடவில்லை;குறியும்
அஃதே -
(நீ அவளை அறிவதற்கு) அடையாளமும் அதுவே.

     சீதை திருமகளைவிட நல்லிலக்கணம் நிரம்பியவள் என்பதாம்.
நல்லிலக்கணங்களில் ஒன்றும் குறைவில்லாமல் அவ்விலக்கணம் முழுவதும்
நிரம்பியிருத்தலால் சீதை 'தேவரும் வணங்குத் தெய்வக் குயில்' எனப்பட்டாள்.
செங்கயல் கருங்கண் செவ்வாய்: முரண் தொடை. குயில் - உவமவாகுபெயர்.
பங்கயத்தவட்கும்.  தேவரும்: உயர்வுசிறப்பும்மைகள்.                  61

4508.'குழல் படைத்து, யாழைச் செய்து
      குயிலொடு கிளியும் கூட்டி
மழலையும் பிறவும் தந்து,
      வடித்ததை, மலரின் மேலான்,
இழை பொரும் இடையினாள்தன்
     இன் சொற்கள் இயையச் செய்தான்;
பிழை இலது உவமை காட்டப்
      பெற்றிலன்; பெறும்கொல் இன்னும்?

     குழல் படைத்து -வேய்ங்குழலையுண்டாக்கியும்;யாழைச் செய்து -
யாழ்க் கருவியை வகுத்தமைத்தும்;குயிலொடு கிளியும் கூட்டி -குயிலையும்
கிளியையும் படைத்தும்;மழலையும் பிறவும் தந்து -(எழுத்து நிரம்பாத)
மழலைச் சொல்லையும், இனிய சொற்களுக்கு உவமையாகும் பொருள்களை
இயற்றியும்;வடித்ததை -பழகித் தேர்ந்த நயத்தை;மலரின் மேலான் -
தாமரை மலரில் வாழ்கின்ற பிரமன் (பின்பு);இழை பொரும்
இடையினாள்தன் -
நூலிழையோடு மாறுபடுகின்ற நுண்ணிய இடையையுடைய
சீதையின்;இன் சொற்கள் இயையச் செய்தான் -இனிய சொற்களுக்கும்
பொருந்துமாறு அமைத்தான்;பிழை இலது -(ஆனால் அச்சொற்களுக்குக்)
குற்றமற்ற;உவமை காட்டப் பெற்றிலன் -உவமைப் பொருள் எதையும்
உண்டாக்கவில்லை;இன்னும் பெறும் கொல் -இனிமேலாவது (அவன்)
படைப்பானோ? (அறியாம்).

     பிரமன் சீதையின் இன்சொற்களைப் படைப்பதற்காக முதலில்
வேய்ங்குழல் முதலியவற்றைப் படைத்துப் பழகிக் கைதேர்ந்த பிறகே
அச்சீதையின் சொற்களைப்