| 4543. | நன் புலன் நடுக்குற, உணர்வு நைந்து அற, பொன் பொலி யாக்கைகள் புழுங்கிப் பொங்குவார், தென் புலம் தங்கு எரி நரகில் சிந்திய என்பு இல் பல் உயிர் என, வெம்மை எய்தினார். |
நன்புலன் நடுக்குற -(அங்கே சென்ற வானர வீரர்கள்) நல்ல ஐம்பொறிகளும் நடுங்கவும்;உணர்வு நைந்து அற -அறிவு தேய்ந்து ஒழியவும்;பொன் பொலியாக்கைகள்-பொன் போல விளங்கும் உடல்கள்; புழுங்கிப் பொங்குவார் -வியர்த்து மனம் கொதிப்பவர்களாய்;தென்புலம் தங்கு -தெற்குத் திசையில் இருக்கின்ற;எரி நரகில் -(எமனது); எரியும் நரகத்தில்;சிந்திய -விழுந்து வருந்துகின்ற;என்பு இல் பல் உயிர் என - (எலும்பில்லாத உடம்பையுடைய) புழு முதலான பல உயிர்த்தொகுதிகளைப் போல;வெம்மை எய்தினார் -கொதிப்பையடைந்தார்கள். அங்கே சென்ற வானரர்கள் நிலத்தின் வெம்மையைப் பொறுக்க முடியாமல் புழுத்துடிப்பதுபோலத் துடித்தார்கள் என்பது. வானரர்கள் வெயிலில் துடிப்பதற்கு என்பு இல் பல்லுயிர் துன்பப்படுவதை உவமை கூறினார். தென்புலத்தவன்: எமன். என்பு இல் பல் உயிர்: புழுக்கள். 'என்பிலதனை வெயில்போலக்காயுமே' - குறள்: 77 23 | 4544. | நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டுதோறு ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்; காட்டினும் காய்ந்து, தம் காயம் தீதலால், சூட்டு அகல்மேல் எழு பொரியின் துள்ளினார். |
நீட்டிய நாவினர் -(அந்த வானரர்கள் நீர் வேட்கையால்) வெளியே தொங்கிய நாக்கையுடையவர்களாயினர்;நிலத்தில் தீண்டுதோறு ஊட்டிய - நிலத்தில் அடிவைக்கும் தோறும் கீழிருந்து தாக்கிய;வெம்மையால் - வெப்பத்தால்;உலையும் காலினர் -கொப்புளம் கண்ட அடிகளையுடையவர்களுமாயினர்;காட்டினும் காய்ந்து -அப் பாலைவனத்தைக் காட்டிலும் மிகுதியாகச் சூடேறி;தம் காயம் தீதலால் - தங்கள் உடம்பு கரிந்து தீய்ந்ததால்;சூட்டுஅகல்மேல் எழு பொரியின் -சூடு கொண்ட சட்டியிலிருந்து மேலெழுகின்ற நெற்பொரிகள் போல;துள்ளினார் - துடித்தார்கள். மிகுந்த நீர் வேட்கையால் நாவை வெளியே நீட்டுதலும், பொறுக்கமுடியாத மிக்க வெப்பத்தால் கால்கள் கொப்புளித்தலும் இயல்பு. நெருப்பினால் |