பக்கம் எண் :

588கிட்கிந்தா காண்டம்

வெம்மையடைந்த சட்டியில் நெல் பொரிந்து மேலெழுவதுபோல வானரவீரர்கள்
பாலைவனத்தின் மிக்க வெம்மையால் துடித்தார்கள் என்பதுஉவமையணி.  24

துன்புற்ற வானரர் பிலத்தில் புகுதல்

4545. ஒதுங்கல் ஆம் நிழல்
      இறை காண்கிலாது, உயிர்
பிதுங்கல் ஆம் உடலினர்,
      முடிவு இல் பீழையார்,
பதங்கள் தீப் பருகிடப்
      பதைக்கின்றார், பல
விதங்களால், நெடும் பில
      வழியில் மேவினார்.

     (வானர வீரர்)ஒதுங்கலாம் நிழல் இறை காண்கிலாது -(வெயிலுக்கு)
ஒதுங்கக் கூடிய சிறிதளவு நிழலைக்கூடக் காணமாட்டாது;உயிர் பிதுங்கல்
ஆம் உடலினர் -
உயிர் வெளியேறக் கூடிய உடலையுடையவர்களும்;முடிவு
இல் பீழையார் -
எல்லையற்றதுன்பத்தையடைந்தவர்களும்;பதங்கள்
நீர்ப்பருகிடப் பதைக்கின்றார் -
அடிகளில் (அப் பாலைவனத்தின்) சூடு
தாக்குவதால் துடிதுடிக்கின்றவர்களுமாய்;பல விதங்களால் -(அந்த
வெப்பத்திலிருந்து தப்புவதற்குப்) பல வகையிலும் முயற்சி செய்து முடிவாக;
நெடும் பில வழியில் -
(அங்கே இருந்த) பெரிய பிலத் துவாரத்தின் வழியை;
மேவினார் -
அடைந்தார்கள்.

     வானரவீரர்கள் அந்தப் பாலைவனத்தில் ஒதுங்கித் தப்புவதற்குச் சிறு
நிழல் கூட அகப்படாமல் உயிர் நீங்கும் நிலையையடைந்து, முடிவாக அங்கே
காணப்பட்ட ஒரு பிலத்தின் வழியைச் சேர்ந்தனர் என்பது. பீழை: துன்பம்
பிதுங்கல்: வெளிப்படல்.                                        25

4546.'  'மீச் செல அரிது இனி,
      விளியின் அல்லது;
தீச் செல ஒழியவும்
      தடுக்கும்; திண் பில -
வாய்ச் செலர் நன்று'
      என, மனத்தின் எண்ணினார்;
போய்ச் சில அறிதும்'
      என்று, அதனில் புக்கனர்.

     இனி -இனிமேல்;விளியின் அல்லது -இறந்து விடுதலல்லாமல்;
மீச்செலவு அரிது -
இதைக் கடந்து அப்பால் செல்லுதல் நமக்கு முடியாத
செயலாகும்;(ஆகையால்) திண் பிலம் வாய்ச் செலல் -வலிய பிலத்தின்
வழியே செல்லுதல்;தீச்செலவு ஒழியவும் தடுக்கும் -