வெம்மையடைந்த சட்டியில் நெல் பொரிந்து மேலெழுவதுபோல வானரவீரர்கள் பாலைவனத்தின் மிக்க வெம்மையால் துடித்தார்கள் என்பதுஉவமையணி. 24 துன்புற்ற வானரர் பிலத்தில் புகுதல் | 4545. | ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது, உயிர் பிதுங்கல் ஆம் உடலினர், முடிவு இல் பீழையார், பதங்கள் தீப் பருகிடப் பதைக்கின்றார், பல விதங்களால், நெடும் பில வழியில் மேவினார். |
(வானர வீரர்)ஒதுங்கலாம் நிழல் இறை காண்கிலாது -(வெயிலுக்கு) ஒதுங்கக் கூடிய சிறிதளவு நிழலைக்கூடக் காணமாட்டாது;உயிர் பிதுங்கல் ஆம் உடலினர் -உயிர் வெளியேறக் கூடிய உடலையுடையவர்களும்;முடிவு இல் பீழையார் -எல்லையற்றதுன்பத்தையடைந்தவர்களும்;பதங்கள் நீர்ப்பருகிடப் பதைக்கின்றார் -அடிகளில் (அப் பாலைவனத்தின்) சூடு தாக்குவதால் துடிதுடிக்கின்றவர்களுமாய்;பல விதங்களால் -(அந்த வெப்பத்திலிருந்து தப்புவதற்குப்) பல வகையிலும் முயற்சி செய்து முடிவாக; நெடும் பில வழியில் -(அங்கே இருந்த) பெரிய பிலத் துவாரத்தின் வழியை; மேவினார் -அடைந்தார்கள். வானரவீரர்கள் அந்தப் பாலைவனத்தில் ஒதுங்கித் தப்புவதற்குச் சிறு நிழல் கூட அகப்படாமல் உயிர் நீங்கும் நிலையையடைந்து, முடிவாக அங்கே காணப்பட்ட ஒரு பிலத்தின் வழியைச் சேர்ந்தனர் என்பது. பீழை: துன்பம் பிதுங்கல்: வெளிப்படல். 25 | 4546. | ' 'மீச் செல அரிது இனி, விளியின் அல்லது; தீச் செல ஒழியவும் தடுக்கும்; திண் பில - வாய்ச் செலர் நன்று' என, மனத்தின் எண்ணினார்; போய்ச் சில அறிதும்' என்று, அதனில் புக்கனர். |
இனி -இனிமேல்;விளியின் அல்லது -இறந்து விடுதலல்லாமல்; மீச்செலவு அரிது -இதைக் கடந்து அப்பால் செல்லுதல் நமக்கு முடியாத செயலாகும்;(ஆகையால்) திண் பிலம் வாய்ச் செலல் -வலிய பிலத்தின் வழியே செல்லுதல்;தீச்செலவு ஒழியவும் தடுக்கும் - |