பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 591

எங்களை இத் துயரத்திலிருந்து காக்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டனர்
என்பது.  புந்தி: எண்ணம். ஓர்கலர்: முற்றெச்சம்.  அல் - எதிர்மறை
இடைநிலை.                                                    29

4550.'உய்வுறுத்துவென்; மனம் உலையிர்;
      ஊழின் வால்
மெய்யுறப் பற்றுதிர்;
      விடுகிலீர்' என,
ஐயன், அக் கணத்தினில்,
      அகலும் நீள் நெறி
கையினில் தடவி, வெங்
      காலின் ஏகினான்.

     உய்வுறுத்துவென் -(மாருதி மற்றவர்களைப் பார்த்து) நீங்கள் பிழைக்க
(வேண்டியன) செய்வேன்;மனம் உலையிர் -உள்ளம் வருந்த வேண்டா;
ஊழின் -
முறையாக (ஒருவர்பின் ஒருவராக நின்று);வால் மெய்யுறப்
பற்றுதிர் -
(எனது) வாலை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்;விடுகிலீர்
என -
அதனை விட்டு விடாதீர்கள் என்று கட்டளையிட்டு;அக்கணத்தினில்
-
(அவ் வானரர்கள் தனது  வாலைப் பற்றிக் கொண்ட) அப்பொழுதே;ஐயன்
-
சிறந்தவனான அந்த அனுமன்;அகலும் நீள்நெறி -செல்லவேண்டிய
அந்தக் குகையின் வழியில்;கையினில் தடவி -கையால் தடவிக் கொண்டு;
வெங்காலின் ஏகினான் -
வேகத்தையுடைய காலினால் நடந்து முன்னே
சென்றான்.

     இருட்பிழம்பில் திசை தெரியாமல் திகைத்துத் தம்மைக் காக்குமாறு
வேண்டிய வானரர்களுக்கு அனுமன் அபயமளித்துத் தனது நீண்ட வாலைப்
பிடித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுக் கைகளால் தடவிக் கொண்டு காலால்
முன்னே நடந்து சென்றான் என்பது.  காலின் : காற்றுப்போல விரைந்து
என்றும் பொருள் கொள்ளலாம்.  இருளாதலால் அனுமன் தடவிச் சென்றான்
என்றார்.                                                   30

4551.பன்னிரண்டு யோசனை
      படர்ந்த மெய்யினன்,
மின் இரண்டு அனைய
      குண்டலங்கள் வில் இட,
துன் இருள் தொலைந்திட,
      துரிதத்து ஏகினான் -
பொன் நெடுங் கிரி
      எனப் பொலிந்த தோளினான்.

     நெடும் பொன்கிரி என -உயர்ந்த மேருமலைபோல;பொலிந்த
தோளினான் -
விளங்கும் தோள்களையுடைய அனுமான்;பன்னி