| 4557. | அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும், தமிழ் நிகர் நறவமும், தனித் தண் தேறலும், இமிழ் கனிப் பிறக்கமும், பிறவும், இன்னன கமழ்வுறத் துவன்றிய கணக்கு இல கொட்பது; |
அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும் -(அந்த நகர்) அமிழ்தத்தைப் போன்ற சோறு முதலிய உணவுப் பொருள்களும்;தமிழ் நிகர் நறவமும் -தமிழ்மொழியையொத்த இனிய தேனும்;தனித்தண் தேறலும் - ஒப்பற்ற குளிர்ந்த மதுவும்;இமிழ் கனிப் பிறக்கமும் -இனிய பழங்களின் திரட்சியும்;இன்னன பிறவும் -இவை போன்ற பிற உணவுப் பொருள்களும்; கமழ்வு உறத் துவன்றிய -மணம் வீசுமாறு நிறைந்துள்ள;கணக்கு இல் கொட்பது -எல்லையற்ற பெருமை வாய்ந்தது. உண்டு களித்தற்கு இனிய பலவகைப் பண்டங்களும் நிறைந்துள்ளது அந்த நகரம் என்பது. 'தமிழ் நிகர் நறவமும்' என்ற தொடரால் ஆசிரியரின் மொழிப் பற்றினையுணரலாம்; தொடர்பு கொண்டாரின் அறிவையும் உணர்வையும் கவர்ந்து கொள்ளை கொள்ளுதல் பொதுப்பண்பு. கொட்பு: பெருமை; பிறக்கம்: திரட்சி.(மலை-) இலக்கணை. 37 கலிவிருத்தம் (வேறுசந்தம்) | 4558. | கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார்; 'இந் நகரம் ஆம், இகல் இராவணனது ஊர்' என்று, உன்னி உரையாடினர்; உவந்தனர்; வியந்தார்; பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார். |
அன்னது -(அனுமன் முதலிய வானர வீரர்கள்) அத்தன்மை வாய்ந்த; கன்னி நெடு மா நகரம் -என்றும் அழிவில்லாத மிகப் பெரிய நகரத்தை; எதிர் கண்டார் -கண்ணெதிரே கண்டவர்களாய்;இந்நகர் -இந்த நகரமானது;இகல் இராவணனது -பகைமையையுடைய இராவணனது; ஊர்ஆம் என்று உன்னி -நகரமாகுமென்ற மனத்தில் நினைந்து; உரையாடினர்-தமக்குள் பேசிக்கொண்டு;உவந்தனர் வியந்தார் - மகிழ்ச்சியும் வியப்பும்ஒரே சமயத்தில் அடைந்தவர்களாய்;பொன்னின் நெடுவாயில் அதன் ஊடு-பொன் மயமான நீண்டு அகன்ற அந்த நகரத்து வாயிலில்;இனிது புக்கார்-இனிதாக நுழைந்து சென்றார்கள். அந்த நகரத்தை வானர வீரர் கண்டதும் இராவணனது இலங்கையென்று நினைத்து உடனே சீதையைக் காணலாமென்ற மகிழ்ச்சியோடு உள்ளே |