பில நகரின் நடுவில் சுயம்பிரபை | 4565. | மற்றவரும் மற்று அது மனக் கொள வலித்தார்; உற்றனர், புரத்தின் இடை; ஒண் சுடரினுள் ஓர் நல் தவம் அனைத்தும் உரு நண்ணி, ஒளி பெற்ற கற்றை விரி பொன் சடையினாளை எதிர் கண்டார். |
மற்றவரும் -(அங்கதன் முதலிய) மற்றை வானர வீரர்களும்;அது மனக் கொள -(அனுமன் கூறிய) அந்தச் சொல் மனத்தில் பதியவே; வலித்தார் -(அவ்வாறே செய்ய) உறுதி கொண்டார்கள்;புரத்தின் இடை உற்றனர் -(யாவரும்) அந்த நகரத்தினிடையே சென்று;ஒண் சுடரினுள் - மிக்க ஒளியையுடைய (அந்நகரின்) நடுவில்;நல்தவம் அனைத்தும் -சிறந்த தவம் முழுவதும்;ஓர் உரு நண்ணி -ஒரு பெண்ணுருவம் பெற்றாற்போல; ஒளி பெற்ற -ஒளி நிறைந்த;கற்றை விரி பொன் சடையினாளை - தொகுதியயக விரிந்த அழகிய சடையையுடையவளான சுயம்பிரபையை;எதிர் கண்டார் -கண்முன்னே கண்டார்கள். மற்று : அசை. அந்த நகரத்தின் இடையில் தவம் ஓர் உருவம் எடுத்துவந்தாற் போன்ற சுயம்பிரபையை வானரவீரர்கள் கண்டனர் என்பது. 45 | 4566. | மருங்கு அலச வற்கலை வரிந்து, வரி வாளம் பொரும், கலசம் ஒக்கும், முலை மாசு புடை பூசி, பெருங் கலை மதித் திரு முகத்த பிறழ் செங் கேழ்க் கருங் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண, |
மருங்கு அலச வற்கலை வரிந்து -இடையிலே அலையுமாறு மர வுரியைக் கட்டி;வரிவாளம் பொரும் -இரேகைகளையுடைய சக்கரவாகப் பறவையைப் போன்றனவும்;கலசம் ஒக்கும் -பொற்கலசங்களை ஒப்பனவுமான;முலை புடை மாசு பூசி -முலைகளின் மேல் அழுக்குப் படியப்பெற்றும்;பெருங் கலைமதி திருமுகத்த -பெருமை மிக்க பதினாறு கலைகளும் நிரம்பிய முழுமதியை யொத்த அழகிய முகத்தில்;பிறழ் செங்கேழ் -பிறழுகின்ற செந்நிறத்தையுடையனவும்;கருங்கயல்களின் பிறழ்-கருமையான கெண்டை மீன்களைப் போலப் |