யுடைக்கொடி -இத்தன்மையுடைய கொடிபோன்ற இப்பெண்;இராமன் மனையாளோ -இராமன் மனைவியாவாளோ? (ஆகமாட்டாள்);அக்கு வடம்-எலும்பு மாலையானது;முத்த மணி ஆரம் -(நவமணிகளில் ஒன்றான)முத்தினால் ஆகிய மாலையோடு;அதன் நேர் நின்று ஒக்கும் எனின் -நேராக இருந்து உவமையாகுமானால்;ஒக்கும் -(இவளும் அச்சீதையை)ஒத்திருப்பாள்;என உரைத்தான் -என்று கூறினான். இராமன் தன்னிடம் கூறிய சீதையின் குணம், குறிகள் ஒன்றும் இவளிடம் இல்லை; ஆதலால், இவள் சீதையில்லையென அனுமன் துணிந்து கூறினான் என்பது. எலும்பு மாலைக்கும், முத்து மாலைக்கும் எந்த அளவு வேறுபாடுண்டோ, அந்த அளவு வேறுபாடு இவளுக்கும் சீதைக்கும் உண்டென்பது. அக்கு வடம்: சங்கு மணி மாலை என்றும் கொள்ளலாம். கொடி: உவமையாகுபெயர். இந்தப் பெண்ணும் சீதையும் ஒப்பாகார் என்பதற்கு அக்குமாலையும் முத்துமாலையும் ஒன்றையொன்று ஒக்குமென்று கூறியதால் பொய்த் தற்குறிப்பணி. 51 சுயம்பிரபையின் வினாவும் வானரர் விடையும் | 4572. | அன்ன பொழுதின்கண் அவ் அணங்கும், அறிவுற்றாள்; முன், அனையர் சேறல் முறை அன்று, என முனிந்தாள்; 'துன்ன அரிய பொன் நகரியின் உறைவிர்அல்லீர்; என்ன வரவு? யாவர்? உரைசெய்க!' என இசைத்தான். |
அன்ன பொழுதின்கண் -அச் சமயத்தில்;அவ்அணங்கும் -அந்தச் சுயம்பிரபையும்;அறிவுற்றாள் -(யோக நிலையிலிருந்து நீங்கித்) தன் நினைவு வரப்பெற்றாள் (அவர்களைப் பார்த்து);அனையர் - தனக்கு எதிரில் அவர்கள்;சேறல் முறை அன்று என -வருவது தகாது என்று; முன் முனிந்தாள் -உணர்ச்சி உற்றவுடன் முதலில் கோபங்கொண்டு;துன்ன அறிய -(நீங்கள்) எவரும் அணுக முடியாத;பொன் நகரியின் உறைவிர் அல்லீர் - பொன்மயமான இந்த நகரத்தில் வாழ்வதற்கு உரியவராக இல்லை;வரவு என்ன -(நீங்கள்) இங்கு வரக் காரணம் என்ன;யாவர் -(நீங்கள்) யாவர்? உரை செய்க என -சொல்லுங்கள் என்று;இசைத்தாள் -கேட்டாள். தவம் செய்யும் பெண்ணாகிய தன்னெதிரில் ஆடவர் பலர் வந்ததால் சுயம்பிரபை கோபித்தாள் என்பது. அறிவுற்றாள்: தன் உணர்வு வரப்பெற்றாள். 52 | 4573. | 'வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார்; |
|