பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 605

 சீதையை ஒளித்தனர்; மறைத்த
      புரை தேர்வுற்று
ஏதம் இல் அறத்
      துறை நிறுத்திய இராமன்
தூதர்; உலகில் திரிதும்'
      என்னும் உரை சொன்னார்.

     வேதனை அரக்கர் -(உலகத்தார்க்குத்) துன்பமே தரும் அரக்கர்கள்;
ஒரு மாயை விளைவித்தார் -
ஒரு வஞ்சகச் செயலைச் செய்தனர்; சீதையை
ஒளித்தனர் -
சீதையை எடுத்துச் சென்று மறைத்துவிட்டார்கள்;ஏதம் இல் -
குற்றம் நீங்கிய;அறத்துறை நிறுத்திய -தரும நெறியை நிலைபெறச் செய்த;
இராமன் தூதர் -
இராமன் தூதுவர்கள் நாங்கள்;மறைத்த புரை தேர்வுற்று
-
(அந்த அரக்கர்கள் சீதையை) ஒளித்து வைத்துள்ள மறைவிடங்களைத்
தேடத்தொடங்கி;உலகில் திரிதும் -உலகில் அலைந்து திரிகின்றோம்;
என்னும் -
என்கின்ற;உரை சொன்னார் -மறுமொழியைக் கூறினார்.

     புரை: மறைவான உறைவிடம்.                                 53

4574. என்றலும், இருந்தவள்
      எழுந்தனள், இரங்கி,
குன்று அனையது ஆயது ஒரு
      பேர் உவகை கொண்டாள்;
நன்று வரவு ஆக!
      நடனம் புரிவல்' என்னா,
நின்றனள்; நெடுங் கண் இணை
      நீர் கலுழி கொள்ள,

     என்றலும் -என்று வானரர் கூறியவுடனே;இருந்தவள் -
வீற்றிருந்தவளாகிய அந்தச் சுயம்பிரபை;எழுந்தனள் -எழுந்துநின்று;இரங்கி
-
(அந்த இராமதூதரிடம்) அன்பு கொண்டு;குன்று அனையது ஆயது -
மலையையொத்ததாகிய;ஒரு பேர் உவகை கொண்டாள் -ஒப்பற்ற பெரு
மகிழ்ச்சியையடைந்தாள்;வரவு நன்று ஆக -(வானரர் களைப் பார்த்து)
உங்கள் வரவு நல்வரவு ஆகுக;நடனம் புரிவல் -ஆனந்தக் கூத்தாடுவேன்;
என்னா -
என்று சொல்லி;நெடுங்கண் இணை -(தன்) நீண்ட இரு
கண்களிலிருந்தும்;நீர் கலுழி கொள்ள -ஆனந்தக் கண்ணீர் வெள்ளமாகப்
பெருக;நின்றனள் -நின்றாள்.

     இந்த வானரவீரர்களை இராமதூதர் என்று அறிந்தவுடன் சுயம்பிரபை
தனது சாபம் நீங்குங்காலம் நெருங்கியதென்ற காரணத்தால் அவர்கள்மீது
அன்பு பாராட்டி, வரவு கேட்டறிந்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிய
மகிழ்ச்சியால் நடனம் செய்யலானாள் என்பது.