பக்கம் எண் :

606கிட்கிந்தா காண்டம்

     மகிழ்ச்சி மிகுதிக்குக் குன்று உவமை; உருவத்திற்குக் கூறப்படும் உவமை
இங்கு எல்லையற்ற மகிழ்ச்சியான உணர்ச்சிக்காயிற்று.                  54

இராமபிரான் பற்றிச் சுயம்பிரபை கேட்க,அனுமன் விடை பகர்தல்

4575.'எவ் உழை இருந்தனன்
      இராமன்?' என, யாணர்ச்
செவ் உழை நெடுங்
      கண் அவள் செப்பிடுதலோடும்,
அவ் உழை, நிகழ்ந்ததனை
      ஆதியினொடு அந்தம்,
வெவ் விழைவு இல் சிந்தை
      நெடு மாருதி விரித்தான்.

     இராமன் -இராமபிரான்;எவ் உழை இருந்தனன் -எவ்விடத்தில்
இருக்கின்றான்?என-என்று;யாணர்ச் செவ் உழை -புதுமையான அழகிய
மான்போன்ற;நெடுங் கண்ணவள் -நீண்ட கண்களையுடைய அந்தச்
சுயம்பிரபை;செப்பிடுதலோடும் -(அனுமனை நோக்கிக்) கேட்டவுடனே;
வெவ் விழைவு இல் -
கொடிய ஆசையில்லாத;சிந்தை நெடு மாருதி -
மனத்தையுடைய பெருமை வாய்ந்த அனுமன்;அவ்உழை நிகழ்ந்ததனை -
அங்கு (இராமனிடத்து) நிகழ்ந்த செய்திகளை;ஆதியினொடு அந்தம்
விரித்தான் -
முதலிலிருந்து முடிவுவரை விரித்துச் சொன்னான்.

     ஆசையென்பது நல்வழியிற் செல்லவொட்டாது மனத்தைத் தீயவழியிற்
புகுத்தலால் 'வெவ் விழைவு' எனப்பட்டது.                         55

சுயம்பிரபை தன் வரலாறு கூறுதல்

4576.கேட்டு, அவளும், 'என்னுடைய கேடு
      இல் தவம் இன்னே
காட்டியது வீடு!' என விரும்பி,
      நனி கால் நீர்
ஆட்டி, அமிழ்து அன்ன சுவை
     இன் அடிசில் அன்போடு
ஊட்டி, மனன் உள் குளிர,
      இன் உரை உரைத்தான்.

     கேட்டு -(அனுமன் கூறிய இராமனது வரலாறு முழுவதும்) கேட்டு;
அவளும் -
அந்தச் சுயம்பிரபையும்;என்னுடைய கேடுஇல் தவம் -நான்
செய்த கெடுதல் இல்லாத தவம்;இன்னே வீடு காட்டியது -இப்பொழுதுதான்
சாப நீக்கத்தை உண்டாக்கியது;என -என்று சொல்லி;விரும்பி -அந்த
வானரவீரரிடம் அன்பு பூண்டு;கால் நீர்