பக்கம் எண் :

608கிட்கிந்தா காண்டம்

 மான் முக நலத்தவன்,
      மயன், செய்த தவத்தால்,
நான்முகன் அளித்துளது, இம்
     மா நகரம் - நல்லோய்!

     நல்லோய் -நற்பண்புள்ளவனே!மான்முக நலத்தவன் மயன் -
மானின் முகம் போன்ற முகத்தையுடைய சிறந்த பண்பாளனான மயன் என்னும்
அசுரத் தச்சன்;நூல்முகம் நுனித்த -யோக நூலில் நுட்பமாகக் குறித்துள்ள;
நெறி நூறு வர -
கணக்கற்ற வழிகள் தன்னிடம் அமையுமாறு;நொய்தா -
எளிதாக;முகம் மேல் நிமிர்த்து -(தனது) முகத்தை மேலே உயர்த்தி
(அண்ணாந்து வானத்தை நோக்கியபடி);வெயில் காலொடு விழுங்கா -
வெயிலையும் காற்றையும் உணவாக உட்கொண்டு;செய்த தவத்தால் -
கடுமையாகச் செய்த தவத்தின் பயனாக;இம்மா நகரம் -இந்தப் பெரிய
நகரமானது;நான்முகன் அளித்துளது -நான்கு முகமுடைய பிரமனால்
(அம்மயனுக்கு) அளிக்கப்பட்டது.

     இந்த நகரம் மயனது தவத்தைக் கண்டு மெச்சிய பிரமனால் அவனுக்குக்
கொடுக்கப்பட்டதாகும் என்பது.  வானத்தை நோக்கி முகத்தை (ஊர்த்துவ
முகம்) அமைத்து, வெயிலையும் காற்றையுமே உட்கொண்டு ஒருவகை யோகத்
தவம் செய்தான், மயன்; இக்கடுந்தவப் பயனாய் நான்முகனிடமிருந்து
இந்நகரத்தை வரமாகப் பெற்றான்.  மயன்: அசுரச் சிற்பி - மானினது முகம்
போன்ற முகமுடையவன்.  மேல்முகம் நிமிர்த்தல்:யோகமுறை.           58

4579.'அன்னது இது; தானவன்
      அரம்பையருள், ஆங்கு ஓர்,
நல் நுதலினாள் முலை
      நயந்தனன்; அந் நல்லாள்
என் உயிர் ஆனாள்; அவளை
      யான், இவன் இரப்ப,
பொன்னுலகின்நின்று, ஒளிர்
      பிலத்திடை புணர்த்தேன்.

     இது அன்னது -இந்த நகரம் அவ்வாறாக அமைக்கப்பட்டது;
தானவன்-அந்த மயன் என்ற அசுரத் தச்சன்;அரம்பையருள் ஓர் நல்
நுதலினாள் -
தேவமாதர்களுள் அழகான நெற்றியையுடைய ஒருத்தியின்;
முலை நயந்தனன்-போகத்தை விரும்பினான்;அந்நல்லாள் என உயிர்
அனாள் -
நல்லஅழகு வாய்ந்த அவள் என் உயிர்போன்ற தோழியாவாள்;
அவன் இரப்ப -அந்த அசுரன் (என்னை) மன்றாடிக் கேட்டுக் கொண்டதால்;
யான் அவளை-நான் அத் தெய்வப் பெண்ணை;பொன்னுலகின் நின்று -
பொன்மயமானதேவலோகத்திலிருந்து;ஒளிர் பிலத்திடை -விளங்குகின்ற
இந்தப் பிலத்தில்;புணர்த்தேன் -கொண்டுவந்து சேர்த்தேன்.