(இவையேயல்லாமல்) இன்னும் அணிகள் முதலியன யாவும் உள்ளன; பெற்றேன் -இவையனைத்தையும் நான் அடைந்துள்ளேன்; (என்றாலும்) அவை முற்றும் அற விட்டு -அவற்றைத் துய்க்காமல் எல்லாப் பற்றுக்களையும் நீக்கி;வினை வெல்வான் -(என்) தீவினையை வெல்லும் பொருட்டு;எண்ண அரிய பல்பகல் -எண்ணுவதற்கு அரிய நெடுங்காலமாக; இருந்தவம் இழைத்தேன் -பெருந்தவத்தைச் செய்தேன். இன்பத்திற்குரிய பல பொருள்கள் இந் நகரில் இருந்தும், எனது சாபம் நீங்குமாறு பல காலமாகப் பெருந்தவம் புரிந்து கொண்டிருந்தேன் என்று சுயம்பிரபை கூறினாள் என்பது. ஓகாரம்: பிரிநிலை. அண்ணல்: அண்மைவிளி. 64 4585. | 'ஐ - இருபது ஓசனை அமைந்த பிலம், ஐயா! மெய் உளது; மேல் உலகம் ஏறும் நெறி காணேன்; உய்யும் நெறி உண்டு, உதவுவீர்எனின்; உபாயம் செய்யும்வகை சிந்தையில்நினைத்திர், சிறிது' என்றாள். |
ஐயா -பெரியவனே! அமைந்த பிலம் -பொருந்திய இக் குகைத் துவாரமானது;ஐ இருபது ஓசனை மெய் உளது -நூறு யோசனை விரிந்த வடிவு கொண்டது;மேல் உலகம் ஏறு நெறி காணேன் -வானுலகத்திற்கு ஏறிச் செல்லும் வழியை அறியேன்;உதவுவீர் எனின் -(நீங்கள் எனக்கு) உதவி செய்வீர்களென்றால்;உய்யும் நெறி உண்டு -(நான்) ஈடேறுவதற்கு வழிஏற்படும்;உபாயம் செய்யும் வகை -அதற்கான உபாயம் செய்யும் விதத்தை;சிந்தையில் சிறிது நினைத்திர் -உங்கள் மனத்தில் சிறிது கருதுங்கள்;என்றாள் -என்று கூறினாள் (சுயம்பிரபை). இந்தப் பிலம் நூறு யோசனை பரப்புள்ளதாய் இருள் அடர்ந்திருப்பதால் மேலே ஏறிச் செல்லும்வழி இதுவென் தெரியாதபடி இந்திரனது சாபம் என்னைத் தடை செய்கிறது; என் சாபவிடைக் காலம் குறுகி உங்கள் வருகையால் நான் ஈடேறும் வகையும் உள்ளது. ஆதலால், அவ்வாறான உபாயத்தைச் செய்ய வேண்டுமென்று அனுமன் முதலியோரைச் சுயம்பிரபை வேண்டினான் என்பது. 65 அனுமன் மறுமொழி 4586. | அன்னது சுயம்பிரபை கூற, அனுமானும் மன்னு புலன் வென்று வரு மாதுஅவள் மலர்த்தாள் |
|