பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 613

 சென்னியின் வணங்கி, 'நனி
      வானவர்கள் சேரும்
பொன்னுலகம் ஈகுவல், நினக்கு'
      எனல் புகன்றான்.

     சுயம்பிரபை -சுயம்பிரபை;அன்னது கூற - அவ்வாறான சொற்களைச்
சொல்ல;அனுமானும் -அனுமனும்;மன்னு புலன் வென்று வரு -
பொருந்திய ஐம்புலன்களையும் வெற்றி கொண்ட;மாதுஅவள் மலர்த்தாள் -
அந்தப் பெண்ணின் தாமரை மலர் போன்ற அடிகளை;சென்னியின்
வணங்கி-
தலையால் வணங்கி;நினக்கு -உனக்கு;வானவர்கள் நனி
சேரும் -
தேவர்கள் மிகுதியாகக் கூடி நிற்கும்;பொன்னுலகம் ஈகுவல் -
பொன்மயமான தேவருலகத்தை அளிப்பேன்;எனல் புகன்றான் -என்று
சொன்னான்.

     மேலுலக நெறியைக் காட்டுமாறு வேண்டிய சுயம்பிரபைக்கு, அவ்வாறே
செய்வதாக அனுமன் வாக்களித்தான் என்பது.  புலன்களை வென்று தவம்
செய்தவாறு அனுமன், அவள் திருவடியை வணங்கினான்.             66

இருளிலிருந்து விடுதலை பெறுவதற்கு உரியதைச் செய்யுமாறு
அனுமனை வானரர் வேண்டுதல்

4587.'முழைத்தலை இருட் கடலின்
      மூழ்கி முடிவேமைப்
பிழைத்து உயிர் உயிர்க்க
      அருள் செய்த பெரியோனே!
இழைத்தி, செயல் ஆய
      வினை' என்றனர் இரந்தார்;
வழுத்த அரிய மாருதியும்
      அன்னது வலிப்பான்,

     முழைத்தலை -(மற்றைய வானரவீரர் அனுமனை நோக்கி) இந்தப்
பிலத்துவாரத்தில்;இருட்கடலில் மூழ்கி -இருளாகிய கடலில் மூழ்கி;
முடிவேமை -
இறக்க வேண்டிய எங்களை;உயிர் பிழைத்து உயிர்க்க -
இறவாமல் தப்பி வாழும்படி;அருள் செய்த -கருணை புரிந்த;பெரியோனை
-
பெருமைக் குணமுடையவனே! செயல் ஆயவினை -இனிச் செய்யத்தக்க
செயலை;இழைத்தி -செய்வாய்;என்றனர் இரந்தார் -என்று பணிந்து
வேண்டினார்கள்;வழுத்த அரிய மாருதியும் -புகழ்ந்து கூறமுடியாத (மிக்க
நற்குணங்களையுடை) அனுமனும்;அன்னது வலிப்பான் -அவ்வாறே
செய்வதற்கு மனத்தினில் உறுதிகொண்டான்.

     இந்தப் பிலத்துள் சீதைஇல்லையென்பது தெளிவாக விளங்க, இனி
இங்கிருப்பதால் எவ்விதப் பயனுமில்லையாதலால் உடனே வெளியே
செல்வதற்குரிய செயலை நாடவேண்டுமென்று அனுமனை மற்றை வானரர்
வேண்டிக்கொள்ள,