அனுமனும் அதற்கு இசைந்தான் என்பது. எங்களைப் பிலத்தில் பாதுகாத்தது போலவே இந்தச் சுயம்பிரபையும் இப் பிலத்திலிருந்து நற்கதியடையுமாறு பாதுகாக்க வேண்டுமென்று வானரவீரர் அனுமனை வேண்டினர் எனவும் கூறுவர். 67 அனுமன் பேருருவம் கொண்டு, பிலத்தைப் பிளந்து, ஒங்கி நிற்றல் 4588. | 'நடுங்கன்மின்' எனும் சொலை நவின்று, நகை நாற மடங்கலின் எழுந்து, மழை ஏற அரிய வானத்து பெருங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற, வெருங் கைகள் சுமந்து, நெடு வான் உற நிமிர்ந்தான். |
நடுங்கன்மின் எனும் -(அனுமன் மற்றவரை நோக்கி) அஞ்சாதீர் கள் என்ற;சொலை நவின்று -அபயமொழியைக் கூறி;நகை நாற -புன்சிரிப்புத் தோன்ற;மடங்கலின் எழுந்து -ஆண்சிங்கம் போலக் கிளம்பி;மழை ஏற அரிய -மேகங்களும் ஏறிச் செல்லமுடியாத;வானத்து உலகொடு - (அப்பாலுள்ள) வானுலகத்தோடு;ஒடுங்கல் இல் பிலம் -குறுகல் இல்லாத (அகன்ற) குகையானது;தலை திறந்து ஒன்ற -தலையிடம் திறந்து ஒன்றாகிவிட;நெடுங் கைகள் சுமந்து -(தன்னுடைய)நீண்ட கைகளையுயர்த்திக் கொண்டு;நெடு வான் உற -(தனது) பெரிய உருவம் விரிந்த ஆகாய முழுவதும் நிறையும்படி;நிமிர்ந்தான் -மேலோங்கினான். அனுமன் மற்றவர்க்கு அபயமளித்துச் சிரித்தவாறு ஆண்சிங்கம் போலக் கிளம்பிப் பிலம் முதல் ஆகாயம்வரை ஒரேவழியாகத் திறக்குமாறு தன் கைகளைத் தூக்கிக் கொண்டு பேருருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பது. நாறுதல்: தோன்றுதல். ஆண்சிங்கம் போன்று பேருருக்கொண்டு எழுந்ததிலிருந்து இவன் அரிய செயல்களையும் எளிதாய இயற்ற வல்லவன் என்ற அவனது பெருமை கூறப்பெற்றது. மடங்கல்: பிடரிமயிர் மடங்கப் பெற்றிருப்பது என்று சிங்கத்திற்குக்காரணக்குறி. 68 4589. | எருத்து உயர் சுடர்ப் புயம் இரண்டும் எயிறு என்ன, மருத்து மகன் இப்படி இடந்து, உற வளர்ந்தான்; கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க, உருத்து, உலகு எடுத்த கருமாவினையும் ஒத்தான். |
|