வேறு வகையாகத் திருமாலின் சேவடி போன்றவன் என்று நயம்படி உரைத்தார் என நயம் காண்பர். 70 பிலத்தின் மேற்பகுதியை மேலைக்கடலில் அனுமன் எறிதல் 4591. | ஏழ் - இருபது ஓசனை இடந்து, படியின்மேல் ஊழுற எழுந்து, அதனை, உம்பரும் ஒடுங்க, பாழி நெடு வன் பிலனுள்நின்று, படர் மேல்பால் ஆழியின் எறிந்து, அனுமன் மேகம் என ஆர்த்தான். |
அனுமன் -அனுமன்;ஏழ்இருபது ஓசனை இடந்து -நூற்று நாற்பது யோசனை தூரம் பிளந்துகொண்டு;பாழி நெடு வன் பிலனுள் நின்று - உள்ளாழ்ந்த நெடிய வலிய பிலத்திலிருந்து;படியினிமல் ஊழ் உற எழுந்து - பூமி மட்டத்திற்கு முறையே எழுந்துவந்து; (பின்பு)அதனை -அந்தப் பில நகரத்தை;உம்பரும் ஒடுங்க -தேவர்களும் அஞ்சி நடுக்கமடைய; படர்மேல்பால் ஆழியின் எறிந்து -பரவிய மேற்குத்திசைக் கடலில் வீசியெறிந்து;ஆழி என ஆர்த்தான் -அலை கடல்போலப் பேராரவாரம் செய்தான். அனுமன் பிலத்தைப் பிளந்து வெளிவந்து பயனில்லாமல் கிடந்த அந்தப் பிலநகரத்தை மேற்குக் கடலிலெறிந்து ஆரவாரம் செய்தான் என்பது. அனுமனின் அப்பொழுதைய நிலையைக் கண்டு தமக்கு என்ன தீங்குவருமோ என்று தேவர்களும் அஞ்சி நடுங்குவாராயினர் என்றார். ஊழுற எழுந்து: முறையாக வருத்தமில்லாமல் கிளம்பி. 71 சுயம்பிரபை பொன்னுலகம் செல்லுதல் 4592. | இன்றும் உள மேல் கடல் இயக்கு இல் பில தீவா நின்று, நிலைபெற்றுள்ளது; நீள் நுதலியோடும், குன்று புரை தோளவர், எழுந்து நெறி கொண்டார்; பொன் திணி விசும்பினிடை நல் நுதலி போனாள். |
இன்றும் உள -(அனுமனால் எறியப்பட்ட அந்தப் பிலநகரம்) இப்பொழுதும் உள்ளதான;மேல்கடல் -மேற்குத்திசைக் கடலில்; |