4615. | கமுக வார் நெடுங் கனக ஊசலில், குமுத வாயினார், குயிலை ஏசுவார்; சமுக வாளியும், தனுவும் வாள் முகத்து அமுத பாடலார், மருவி ஆடுவார். |
குமுத வாயினார் -செவ்வாம்பல் மலர் போன்ற வாயையுடை யவர்களும்;குயிலை ஏசுவார் -(தமது குரலால்) குயிலைப் பழிப் பவர்களும்; சமுக வாளியும் -கூட்டமான அம்புகள் போன்ற கண் களையும்;தனுவும் - வில்லைப் போன்ற புருவங்களையும் கொண்ட;வாள் முகத்து -ஒளி பொருந்திய முகங்களையுடைய;அமுத பாடலார் -அமிழ்தம் போன்ற இனிய பாடல்களைப் பாடுகின்றவர்களான மகளிர்;கமுக வார் நெடுங் கனக ஊசலில் -பாக்கு மரங்களில் கட்டப்பட்ட நீண்ட பொன்னூஞ்சல்களில்; மருவி ஆடுவார் - பொருந்தி ஆடி மகிழ்வார்கள். அங்கே பாக்குமரங்களில் கட்டப்பட்டுள்ள பொன்னூஞ்சல்களில் மகளிர் மனமகிழ்ந்து ஆடுவாரென அந்த இடத்தின் அமைதியான சூழல் வருணிக்கப் பெற்றது. தனு: மகளிர் புருவத்திற்கு வடிவம் தொழிலும் பற்றிய உவமை. வாளி, தனு: உவமவாகு பெயர்கள். உருவக உயர்வுநவிற்சியணி. 22 4616. | இனைய ஆய ஒண் துறையை எய்தினார்; நினையும் வேலைவாய் நெடிது தேடுவார்; வினைய வார் குழல் திருவை மேவலார்; புனையும் நோயினார், கடிது போயினார். |
இனைய ஆய -இத் தன்மையதான;ஒண் துறையை -அழகிய முண்டகத் துறையை;எய்தினார் -அடைந்தனர்;நினையும் வேலை வாய் - நினைக்கும் நேரத்திற்குள்;நெடிது தேடுவார் -வெகுதூரமாகத் தேடினர்; வினைய வார் குழல் திருவை -ஐவகையாக அணி செய்யத் தக்க நீண்ட கூந்தலையுடைய திருமகளான சீதையை;மேவலார் -காணப்பெறாமல்; புனையும் நோயினார் -அதனால் ஏற்பட்ட துன்பத்தையுடையவராய்;கடிது போயினார் -விரைவாக (அப்பால் தேடச்) சென்றார்கள். முண்டகத் துறை முழுவதும் சீதையைத் தேடி அங்குக் காணாமையால் வானர வீரர்கள் அப்பாற் செல்லலாயினர் என்பது. வினைய வார்குழல்: முடி, குழல், தொங்கல், பனிச்சை, சுருள் ஆகிய ஐவகைத் தொழிலுக்குரிய கூந்தல். வேலை - வேளை என்பதன் திரிபு. 23 பாண்டு மலையின் சிகரத்தை வானரர் அடைதல் 4617. | நீண்ட மேனியான், நெடிய தாளின்நின்று ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம், பாண்டு அம் மலைப் படர் விசும்பினைத் தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார். |
|