பக்கம் எண் :

ஆறு செல் படலம் 633

 கண்ணுற நோக்கலுற்றார், களி
      உறக் கனிந்த காமர்
பண் உறு கிளவிச் செவ்
      வாய், படை உறும் நோக்கினாளை,
எண்ணுறு திறத்தும் காணார்; இடர்
      உறும் மனத்தர் எய்த்தார்.

     (வானர வீரர்)விண் உற நிவந்த -வானத்தைப் பொருந்தும்படி
உயர்ந்த;சோதி -ஒளியையுடைய;வெள்ளிய குன்றம் மேவி -
வெண்ணிறமான அந்தப் பாண்டுமலையைப் பொருந்தி;கண்ணுற
நோக்கலுற்றார் -
(அங்கே) சீதையைக் காண்பதற்கு ஆர்வத்தோடு தேடத்
தொடங்கியவர்களாகிய;களி உற -மகிழ்ச்சியடையுமாறு;கனிந்த -முற்றிய;
காமர் பண் உறு -
விரும்பத் தகுந்த இசைப் பாடல் போன்ற;கிறவிச்
செவ்வாய் -
இனிய சொற்களைப் பேசும் சிவந்த வாயையும்;படை உறும்
நோக்கினாளை -
வேற்படை போன்ற கண்களையுமுடைய சீதையை;
எண்ணுற திறத்தும் -
தாம் கருதிப் பார்த்த இடங்களிலெல்லாம்;காணார் -
காணவில்லை;இடர் உறு மனத்தர் -துயரம் பொருந்திய
மனத்தையுடையவராய்;எய்த்தார் -தளர்வுற்றார்கள்.

     காமர்: காமம் மரு என்பதன் மரூஉ. உறு: (இங்கே) உவமவுருபு. அந்தப்
பாண்டுமலையின் பல இடங்களில் தேடியும் சீதையைக் காணாமையால் அவ்
வானரவீரர்கள் தளர்ந்தார்கள் என்பது.                             26

கோதாவரியை அடைதல்

4620. ஊதைபோல் விசையின், வெங் கண்
      உழுவை போல் வயவர், ஓங்கல்
ஆதியை அகன்று செல்வார்;
      அரக்கனால் வஞ்சிப்புண்ட
சீதை  போகின்றாள் கூந்தல் வழீஇ
      வந்து, புவனம் சேர்ந்த
கோதைபோல் கிடந்த கோதாவரியினைக்
      குறுகிக் சென்றார்.

     ஊதைபோல் விசையின் -காற்றைப் போல வேகத்தைக் கொண்ட;
வெங் கண் -
(சினத்தால்) கொடுமையான பார்வையுடைய;உழுவைபோல்
வயவர் -
புலிபோன்ற வலிமையுள்ள அந்த வானர வீரர்;ஓங்கல் ஆதியை -
அந்தப் பாண்டு மலையின் அடிவாரத்தை;அகன்று செல்வார் -நீங்கி
அப்பாலே செல்பவர்களாகி;அரக்கனால் வஞ்சிப்பு உண்ட -இராவணனால்
வஞ்சித்துக் கவரப்பட்டு;சீதை போகின்றாள் -செல்லுகின்ற சீதையினது;
கூந்தல் வழீஇ வந்து -