| | கண்ணுற நோக்கலுற்றார், களி உறக் கனிந்த காமர் பண் உறு கிளவிச் செவ் வாய், படை உறும் நோக்கினாளை, எண்ணுறு திறத்தும் காணார்; இடர் உறும் மனத்தர் எய்த்தார். |
(வானர வீரர்)விண் உற நிவந்த -வானத்தைப் பொருந்தும்படி உயர்ந்த;சோதி -ஒளியையுடைய;வெள்ளிய குன்றம் மேவி - வெண்ணிறமான அந்தப் பாண்டுமலையைப் பொருந்தி;கண்ணுற நோக்கலுற்றார் -(அங்கே) சீதையைக் காண்பதற்கு ஆர்வத்தோடு தேடத் தொடங்கியவர்களாகிய;களி உற -மகிழ்ச்சியடையுமாறு;கனிந்த -முற்றிய; காமர் பண் உறு -விரும்பத் தகுந்த இசைப் பாடல் போன்ற;கிறவிச் செவ்வாய் -இனிய சொற்களைப் பேசும் சிவந்த வாயையும்;படை உறும் நோக்கினாளை -வேற்படை போன்ற கண்களையுமுடைய சீதையை; எண்ணுற திறத்தும் -தாம் கருதிப் பார்த்த இடங்களிலெல்லாம்;காணார் - காணவில்லை;இடர் உறு மனத்தர் -துயரம் பொருந்திய மனத்தையுடையவராய்;எய்த்தார் -தளர்வுற்றார்கள். காமர்: காமம் மரு என்பதன் மரூஉ. உறு: (இங்கே) உவமவுருபு. அந்தப் பாண்டுமலையின் பல இடங்களில் தேடியும் சீதையைக் காணாமையால் அவ் வானரவீரர்கள் தளர்ந்தார்கள் என்பது. 26 கோதாவரியை அடைதல் | 4620. | ஊதைபோல் விசையின், வெங் கண் உழுவை போல் வயவர், ஓங்கல் ஆதியை அகன்று செல்வார்; அரக்கனால் வஞ்சிப்புண்ட சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து, புவனம் சேர்ந்த கோதைபோல் கிடந்த கோதாவரியினைக் குறுகிக் சென்றார். |
ஊதைபோல் விசையின் -காற்றைப் போல வேகத்தைக் கொண்ட; வெங் கண் -(சினத்தால்) கொடுமையான பார்வையுடைய;உழுவைபோல் வயவர் -புலிபோன்ற வலிமையுள்ள அந்த வானர வீரர்;ஓங்கல் ஆதியை - அந்தப் பாண்டு மலையின் அடிவாரத்தை;அகன்று செல்வார் -நீங்கி அப்பாலே செல்பவர்களாகி;அரக்கனால் வஞ்சிப்பு உண்ட -இராவணனால் வஞ்சித்துக் கவரப்பட்டு;சீதை போகின்றாள் -செல்லுகின்ற சீதையினது; கூந்தல் வழீஇ வந்து - |