(682) என முன்பு கூறியதை நினைவு கூர்க. கலுழி: கலங்கல் நீர். வினை முடிவு: யாறு பொலிந்தது என இயைத்துப் பொருள் முடிவு கொள்ள வேண்டும். 28 | 4622. | ஆசு இல் பேர் உலகில் காண்போர் அளவைநூல் எனலும் ஆகி, காசொடு கனகம் தூவி, கவின் உறக் கிடந்த கான் யாறு, - ஏசு இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து, எருவை வேந்தன் வீசிய வடக மீக் கோள் ஈது என - விளங்கிற்று அன்றே. |
காசொடு கனகம் தூவி -இரத்தினங்களொடு பொன்னையும் தன்அலைகளால் கொழித்துக் கொண்டு;கவின் உறக் கிடந்த கான் யாறு - அழகாக ஓடிப் பல காடுகளிடையே செல்லும் அந்த கோதாவரி நதி;ஆசு இல் பேருலகில் -குற்றமற்ற பெரிய இந்த நிலவுலகத்தில்;காண் போர் - அதனைக் காண்பவர்க்கு;அளவை நூல் எனலும் ஆகி -தருக்க சாத்திரம் போல விளங்கி;எருவை வேந்தன் -கழுகுகளுக்கு அரசனான சடாயு;ஏசு இல் போர் அரக்கன் -பழிப்புக்கிடமில்லாத போரில் சிறந்த அரக்கனாகிய இராவணனது;மார்பின் இடை -மார்பிலிருந்து;பறித்து வீசிய -பிடுங்கி அலகால் வீசியெறிந்து;மீக் கோள் வடகம் ஈது என -மேலே அணியப் பெற்ற இரத்தினமாலையோ இது என்று சொல்லத்தக்காய்;விளங்கிற்று - விளங்கியது. அன்று, ஏ: ஈற்றசைகள் கோதாவரி நதி பூமியையளக்கக்கூடிய அளவை நூல் போலவும், கழுகரசனான சடாயு, சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனோடு போர் செய்கையில் அவனது மார்பிலிருந்து கழற்றியெறிந்த முத்தாரம் போலவும் விளங்கியது என்பது, வடகம் - வடம் என்பதன் விரித்தல் விகாரம். கோதாவரிக்குத் தருக்க நூல் உவமம்: 29 சுவணகத் துறை கடந்து குலிந்த நாட்டைக் கடத்தல் | 4623. | அந் நதி முழுதும் நாடி, ஆய் வளை மயிலை, யாண்டும் சந்நிதி உற்றிலாதார், நெடிது பின் தவிரச் சென்றார்; 'இன்ன தீதுஇலாத, தீது' என்று யாவையும் எண்ணும் கோளார், சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணகத் துறையில் புக்கார். |
இன்ன தீது இலாத -இன்னது நல்லது; (இன்ன) தீது என்று -இன்னது கெட்டது என்று;யாவையும் எண்ணும் கோளார் -எல்லாவற்றையும் |