பக்கம் எண் :

636கிட்கிந்தா காண்டம்

ஆராய்ந்து அறியும் தன்மையுடைய வானரவீரர்;அந் நதி
முழுதும் நாடி -
அந்தக் கோதாவரி நதிப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்து;
ஆய்வளை மயிலை -
சிறந்த வளையல்களையணிந்த மயில் போன்ற
சீதையை;யாண்டும் சந்நிதி உற்றிலாதார் -எதிரில் காணப் பெறாத
அவர்கள்;நெடிது பின் தவிரச் சென்றார் -நீண்ட வழி பின்னால் கழியுமாறு
முன்னேறிச் சென்றவர்களாய்;சொன்ன தீவினைகள் -நூல்களில் கூறிய
பாவங்களையெல்லாம்;தீர்க்கும் சுவணகத் துறையில் -(தன்னில்
படிவோர்க்குப்) பாவத்தைப் போக்குகின்ற சுவணக (சோணை) நதியிடத்தில்;
புக்கார் -
சென்று சேர்ந்தார்கள்.

     ஆய்வளை மயில்: அடையடுத்த உவமையாகுபெயர். சந்நிதி:
வடசொல்லின் திரிபு - எதிரேகாணல், சுவணகம்: ஒரு நதி; சோணம், சோணை
எனவும் வழங்கப் பெறும்.                                        30

4624.சுரும்பொடு தேனும், வண்டும்,
     அன்னமும், துவன்றி; புள்ளும்,
கரும்பொடு செந் நெல் காடும்,
      கமல வாவிகளும், மல்கி;
பெரும் புனல் மருதம் சூழ்ந்த
      கிடக்கை பின் கிடைக்கச் சென்றார்;
குரும்பை நீர் முரஞ்சும் சோலைக்
      குலிந்தமும், புறத்துக் கொண்டார்.

     சுரும்பொடு தேனும் வண்டும் -பொன்வண்டு, தேன்வண்டு, கருவண்டு
என்னும் பலவகையான வண்டுகளும்;அன்னமும் -அன்னப் பறவைகளும்;
துவன்றி -
நெருங்கி;புள்ளும் -நாரை முதலான ஏனைய பறவைகளும்;
கரும்பொடு -
கரும்புகளும்;செந்நெல் காடும் -செந்நெற் பயிர்களும்
அடர்ந்த நன்செய் இடங்களும்;கமல வாவிகளும் -தாமரைத் தடாகங்களும்;
மல்கி -
நிறைந்து;பெரும்புனல் மருதம் சூழ்ந்த -மிக்க நீர்வளங் கொண்ட
மருதநிலம் சூழ்ந்துள்ள;கிடக்கை பின் கிடக்க -இடங்கள் தம் பின்னால்
கிடக்கும்படி;சென்றார் -அப்பால் கடந்து சென்றனர் அந்த வானரவீரர்கள்;
நீர்க் குரும்பை -
இளநீர்க் காய்கள்;முரஞ்சும் சோலைக் குலிந்தமும் -
நிரம்பிய தென்னஞ்சோலைகளையுடைய குலிந்த நாட்டையும்;புறத்துக்
கொண்டார் -
(தமது) பின்புறத்ததாகும்படி முன்னேறிச் சென்றார்கள்.

     மருதநில: அன்னம் முதலிய பறவைகளையும், செந்நெல் முதலிய உணவு
வகைகளையும் தாமரை மலர்களையும், பொய்கைகளையும் தன்னிடத்தே
கொண்டது; வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் மருதம் ஆகும்.  சுரும்பு,
தேன், வண்டு: வண்டுகளின் வகைகளைக் குறிக்கும் சொற்கள்; சுரும்பு; எல்லா
மணத்திலும் செல்வது எனவும் தேன், வண்டு: நன்மணத்தே செல்வன எனவும்
கூறுவர்.  இச் செய்யுளில் நிலம், நீர், பூ, பறவை, மரம் முதலியவற்றால்
குவிந்த நாட்டின் மருத