பக்கம் எண் :

ஆறு செல் படலம் 637

வளம் கூறப் பெற்றது.  குரும்பை: தெங்கு, பனை ஆகிய மரங்களின்
இளங்காய் குலிந்தம்: இக் குலிந்ந நாடு கேரள நாட்டின் வடக்கே
மேற்கடற்கரையையடுத்துள்ளதாகவும் பழைய ஐம்பத்தாறு நாடுகளுள்
ஒன்றெனவும்கூறுவர்.                                          31

அருந்ததி மலை, மரகத மலைகளைக் கடந்து வேங்கட மலை சேர்தல்

4625.கொங்கணம் ஏழும் நீங்கி, குட
      கடல் தரளக் குப்பைச்
சங்கு அணி பானல் நெய்தல் -
      தண் புனல் தவிர ஏகி,
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய
      நீள் கோட்டுத்  தேவர்
அங்கைகள் கூப்ப, நின்ற
      அருந்ததிக்கு அருகர் ஆனார்.

     கொங்கணம் ஏழும் நீங்கி - (அந்த வானர வீரர்) கொங்கண நாட்டின்
ஏழு பிரிவுகளையும் கடந்து;குடகடல் -மேற்குக் கடலில் உண்டான;தரளக்
குப்பை -
முத்துக் குவியல்கள்;சங்கு -சங்குகள்;அணிபானல் -அழகான
கருங்குவளை மலர்கள்;நெய்தல் -நெய்தற் பூக்கள்;தண்புனல் தவிர ஏகி -
ஆகியவை நிறைந்த குளிர்ந்த நீர்ப் பகுதிகளையுடைய நெய்தல் நிலத்தை
நீங்கிச் சென்று;திங்களின் கொழுந்து சுற்றும் -பிறைச் சந்திரன் சுற்றிச்
செல்லக்கூடிய;சிமய நீள் கோடு -சிகரங்களையுடைய உயரமான
கொடுமுடிகளைக் கொண்டதும்;தேவர் அங்கைகள் கூப்ப நின்ற -
தேவர்கள் தம் அழகிய கைகளைக் குவித்து வணங்கும்படி நிற்பதுமான;
அருந்ததிக்கு -
அருந்ததி என்னும் மலைக்கு;அருகர் ஆனார் -அருகில்
போய்ச் சேர்ந்தார்கள்.

     வானரவீரர்கள் ஏழு பிரிவுகளையுடைய கொங்கண தேசத்தையும்,
மேற்குத் திசையிலுள்ள நெய்தல் நிலங்களையும் தாண்டி மிக உயர்ந்துள்ள
அருந்ததிமலையைச் சேர்ந்தார்கள் என்பது. கொங்கணம்: மகாராட்டிர
மாநிலத்தைச் சேர்ந்த வடகன்னடம் என்னும் மாவட்டத்தது. தேவர்
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததி: உயர்வு நவிற்சியணி.               32

4626.அருந்ததிக்கு அருகு சென்று, ஆண்டு
      அழகினுக்கு அழகு செய்தாள்
இருந்த திக்கு உணர்ந்திலாதார்
      ஏகினார்; இடையர் மாதர்
பெருந் ததிக்கு அருந் தேன் மாறும்
      மரகதப் பெருங் குன்று எய்தி,
இருந்து, அதின் தீர்ந்து சென்றார்,
      வேங்கடத்து இறுத்த எல்லை -.

     அருந்ததிக்கு அருகு சென்று -(அவ் வானர வீரர்) அருந்ததி
மலைக்குப் பக்கத்திற் சென்று;ஆண்டு -அந்த இடத்தில்;அழகினுக்கு