வளம் கூறப் பெற்றது. குரும்பை: தெங்கு, பனை ஆகிய மரங்களின் இளங்காய் குலிந்தம்: இக் குலிந்ந நாடு கேரள நாட்டின் வடக்கே மேற்கடற்கரையையடுத்துள்ளதாகவும் பழைய ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்றெனவும்கூறுவர். 31 அருந்ததி மலை, மரகத மலைகளைக் கடந்து வேங்கட மலை சேர்தல் 4625. | கொங்கணம் ஏழும் நீங்கி, குட கடல் தரளக் குப்பைச் சங்கு அணி பானல் நெய்தல் - தண் புனல் தவிர ஏகி, திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டுத் தேவர் அங்கைகள் கூப்ப, நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார். |
கொங்கணம் ஏழும் நீங்கி - (அந்த வானர வீரர்) கொங்கண நாட்டின் ஏழு பிரிவுகளையும் கடந்து;குடகடல் -மேற்குக் கடலில் உண்டான;தரளக் குப்பை -முத்துக் குவியல்கள்;சங்கு -சங்குகள்;அணிபானல் -அழகான கருங்குவளை மலர்கள்;நெய்தல் -நெய்தற் பூக்கள்;தண்புனல் தவிர ஏகி - ஆகியவை நிறைந்த குளிர்ந்த நீர்ப் பகுதிகளையுடைய நெய்தல் நிலத்தை நீங்கிச் சென்று;திங்களின் கொழுந்து சுற்றும் -பிறைச் சந்திரன் சுற்றிச் செல்லக்கூடிய;சிமய நீள் கோடு -சிகரங்களையுடைய உயரமான கொடுமுடிகளைக் கொண்டதும்;தேவர் அங்கைகள் கூப்ப நின்ற - தேவர்கள் தம் அழகிய கைகளைக் குவித்து வணங்கும்படி நிற்பதுமான; அருந்ததிக்கு -அருந்ததி என்னும் மலைக்கு;அருகர் ஆனார் -அருகில் போய்ச் சேர்ந்தார்கள். வானரவீரர்கள் ஏழு பிரிவுகளையுடைய கொங்கண தேசத்தையும், மேற்குத் திசையிலுள்ள நெய்தல் நிலங்களையும் தாண்டி மிக உயர்ந்துள்ள அருந்ததிமலையைச் சேர்ந்தார்கள் என்பது. கொங்கணம்: மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த வடகன்னடம் என்னும் மாவட்டத்தது. தேவர் அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததி: உயர்வு நவிற்சியணி. 32 4626. | அருந்ததிக்கு அருகு சென்று, ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார்; இடையர் மாதர் பெருந் ததிக்கு அருந் தேன் மாறும் மரகதப் பெருங் குன்று எய்தி, இருந்து, அதின் தீர்ந்து சென்றார், வேங்கடத்து இறுத்த எல்லை -. |
அருந்ததிக்கு அருகு சென்று -(அவ் வானர வீரர்) அருந்ததி மலைக்குப் பக்கத்திற் சென்று;ஆண்டு -அந்த இடத்தில்;அழகினுக்கு |