பக்கம் எண் :

652கிட்கிந்தா காண்டம்

சீதையைக் காணாமையால் வானரர் வருந்துதல்

4650.யாவரும் அவ் வயின் எளிதின் எய்தினார்;
பூ வரு புரி குழல், பொரு இல் கற்புடைத்
தேவியைக் காண்கிலார், செய்வது ஓர்கிலார்,
நா உறக் குழறிட நவில்கின்றார்அரோ:   *

     யாவரும் -வானர வீரர் எல்லோரும்;அவ்வயின் எளிதின் எய்
தினார் -
அந்த இடத்திற்கு எளிதாக வந்து சேர்ந்தனர்;பூ வரு புரிகுழல் -
தாமரை மலரில் தோன்றிய (இலக்குமியின் அவதாரமான) சுருண்ட
கூந்தலையும்;பொருவு இல் கற்புடைய -ஒப்பில்லாத கற்புத் தன்மையும்
கொண்ட;தேவியைக் காண்கிலார் -சீதையைக் காணாமல்;செய்வது
ஓர்கிலார் -
இனிமேல் செய்ய வேண்டியது (இன்னதென்று)
அறியாதவர்களாய்;நா உறக் குழறிட -நாக்கு மிகவும் குழற;
நவில்கின்றார்-பேசலானார்கள்.

     பூவரு: மலரைச் சூடிய என்றும், பூமியிலிருந்து தோன்றிய என்றும்
இருவகையாகப் பொருள் கொள்ளலாம்.  காண்கிலார், ஓர்கிலார் - எதிர்மறை
முற்றெச்சங்கள்.                                                 3

4651.'அற்றது நாள் வரை
     அவதி; காட்சியும்
உற்றிலம்; இராகவன்
      உயிரும் பொன்றுமால்;
கொற்றவன் ஆணையும்
      குறித்து நின்றனம்;
இற்றது நம் செயல்,
      இனி' என்று எண்ணினார்.

     வரை நாள் அவதி -(அரசன் நமக்கு) குறித்த தவணையும்;அற்றது -
முடிந்து விட்டது;காட்சியும் உற்றிலம் -சீதையைக் காணுகின்ற காட்சியையும்
நாம் பெறவில்லை;இராகவன் உயிரும் -(இதையறிந்தால்) இராமனது
உயிரும்;பொன்றும் -அழிந்துவிடும்;கொற்றவன் ஆணையும் -அரசனது
கட்டளையும்;குறித்து நின்றனம் -மனத்திற் குறித்து நின்றோம்;இனி நம்
செயல் இற்றது -
இனிமேல் நாம் செய்யக் கூடிய செயலும் இல்லை;என்று
எண்ணினார் -
என்று கூறி (அந்த வானர வீரர்கள்) பலவாறு சிந்தித்தார்கள்.

     கொற்றவன் ஆணை குறித்தது.  முப்பது நாட்கள் கடந்தால் தமக்கு
என்ன தண்டனை கிடைக்குமோ என்ற அச்சத்தால் ஆகும்.

     நம் செயல் இற்றது: தெளிவு பற்றிய காலவழுவமைதி.              4