பக்கம் எண் :

654கிட்கிந்தா காண்டம்

கடலுக்கு அருகிலுள்ள மகேந்திர மலையில்;கனக மால் வரை -பெரிய
மேரு மலைகள்;நிரை துவன்றிய என -வரிசையாய் நெருங்கி நின்றன
என்று சொல்லும்படி;நெடிது இருந்தவர்க்கு -மிகுதியாக இருந்த வானர
வீரர்களுக்கு;உரை செயும் பொருள் -'நான் கூறுவதற்குரிய செய்தி;உளது
என -
ஒன்று உண்டு' என;உணாத்தினான் -கூறலானான்.

     ஒவ்வொரு வானரனும் மேருமலை போன்றுள்ளான் என்பது.
வானரர்களைக் கனக மால்வரை நிரை துவன்றிய எனக் கூறியது
இல்பொருளுவமையாம்.  கனகமால் வரை உருவத்தால் வானரர்க்கு
உவமையாயிற்று.                                               6

4654.'   ''நாடி நாம் கொணருதும்,
      நளினத்தாளை, வான்
மூடிய உலகினை முற்றும்
      முட்டி'' என்று
ஆடவர் திலகனுக்கு
      அன்பினார் எனப்
பாடவம் விளம்பினம்;
      பழியில் மூழ்குவோம்.

     நாம் -(அங்கதன் வானரர்களை நோக்கி) நாம் எல்லோரும்;வான்
மூடிய உலகினை -
வானத்தினால் கவியப் பட்ட உலகத்தை;முற்றும் முட்டி
நாடி -
முழுவதும சென்று தேடிப் பார்த்து;நளினத் தாளை -தாமரை
மலரில் வாழும் திருமகளான சீதையை;கொணருதும் என்று -மீட்டு
வருவதற்குரிய செய்தியைக் கொண்டு வருவோம் என்று;ஆடவர்
திலகனுக்கு-
ஆண்களில் திலகம் போன்ற இராமனுக்கு;அன்பினார்
என -
அன்புடையவர் போல;பாடவம் விளம்பினம் -நம் வல்லமையைக்
கூறினோம்;பழியில் மூழ்குவாம் -ஆனால் இப்பொழுதோ நாம்
தீராப்பழிக்கே உள்ளாகிவிட்டோம்.

     சீதையைத் தேடுமாறு நம்மை அனுப்பிய காலத்தில் இராமனிடத்துப்
பத்தியுடையவர்போல நடித்துச் செயலை முடித்தே தீர்வோமென்று
வல்லமையாகக் கூறியது இப்போது நமது பழிப்புக்கே காரணமாம் என
அங்கதன் கூறினான் என்பது.  ஆடவர் திலகன்: திலகம் நெற்றிக்கு
விளக்கத்தைச் செய்வதுபோல ஆடவர்களுக்கு விளக்கம் செய்பவன் இராமன்
என்பது குறிப்பு.  பாடவம்: வீண் பெருமை, வல்லமை.                 7

4655.'   ''செய்தும்'' என்று அமைந்தது
     செய்த தீர்ந்திலம்;
நொய்து சென்று,
      உற்றது நுவலகிற்றலம்;
''எய்தும் வந்து'' என்பது
      ஒர் இறையும் கண்டிலம்;