| உய்தும் என்றால், இது ஓர் உரிமைத்து ஆகுமோ? |
செய்தும் என்று -நாம் செய்வோம் என்று;அமைந்தது -ஏற்றுக் கொண்ட செயலை;செய்து தீர்ந்திலம் -செய்து முடித்தோமல்லோம்; நொய்து சென்று -(குறித்த தவணைக் காலத்திற்குள்) விரைவாகத் திரும்பிச் சென்று;உற்றது நுவலகிற்றிலம் -நிகழ்ந்த வரலாற்றைத் தெரிவிக்கவும் வலியற்றவரானோம்;வந்து எய்தும் என்பது -(தவணை கடந்தாலும்) காரியம் கைகூடும் என்பதை;ஓர் இறையும் கண்டிலம் -ஒரு சிறிதும் அறிந்தோமில்லை (இப்படியிருப்பதால்);உய்தும் என்றால் -உயிரைப் பிடித்துக் கொண்டு நாம் வாழ்வோமென்றால்;இது -அவ்வாறு நாம் உயிர்வாழும் செயல்;ஓர் உரிமைத்து ஆகுமோ -மேற்கொண்ட நட்புக்குத் தகுதியான ஒரு செயலாகுமோ? (ஆகாது). நாம் எண்ணிவந்த செயல் முடிவதற்கு எந்த வகையிலும் சிறிதும் வழியில்லை; தவணைக் காலத்திற்குள் மீண்டு சென்று சேர்தலும் முடியாது; ஆகையால் உயிர்போக்குவதே உறுதியென்று அங்கதன் அறுதியிட்டான் என்பது. நுவலகிற்றிலம்: தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று; கில் - ஆற்றலையுணர்த்தும் இறந்தகால இடைநிலை. இறை: மிகச்சிறிய. 8 4656. | 'எந்தையும் முனியும்; எம் இறை இராமனும் சிந்தனை வருந்தும்; அச் செய்கை காண்குறேன்; நுந்துவென் உயிரினை; நுணங்கு கேள்வியீர்! புந்தியின் உற்றது புகல்விர் ஆம்' என்றான். |
எந்தையும் முனியும் -(செயலை முடிக்காமல் தவணை கடந்த பிறகு மீண்டு சென்றால்) என் தந்தையான மன்னனும் நம்மைக் கோபிப்பான்;எம் இறை இராமனும் -நம் தலைவனான இராமனும்;சிந்தனை வருந்தும் - மனம் வருந்துவான்;அச்செய்கை காண்குறேன் -அந்த நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணும் திறமுடையவனாகேன்;உயிரினை -ஆதலால் நான் என்னுயிரை;நுந்துவென் - வலிதில் மாய்த் துக் கொள்வேன்;நுணங்கு கேள்வியீர் -நுட்பமான நூற்கேள்வியுடைவர்களே! புந்தியின் உற்றது - உங்கள் அறிவில்பட்டதை;புகல்விர் -ஆராய்ந்து கூறுவீர்;என்றான் - என்று (அங்கதன்) சொன்னான். ஆம்: அசை. சுக்கிரீவன் கடுந்தண்டனைக்கும், இராமனின் பெரு வருத்தத்திற்கும் அஞ்சி அங்கே போகாமல் இங்கேயே உயிர்போக்குவது நல்லது என்று எண்ணுகிறேன்; இதைக் குறித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்களென்று அங்கதன் |