பக்கம் எண் :

சம்பாதிப் படலம் 657

     ஆண்தகை அரசு இளங்குமர -(மேலும் சாம்பவான் அங்கதனை
நோக்கி) ஆடவரிற் சிறந்த இளவரசனான அங்கதனே!மீண்டு -திரும்பிச்
சென்று;இனி நாம் -இனிமேல் நாங்கள்;ஒன்று விளம்ப மிக்கது என் -
சொல்லக் கூடிய செய்தி என்ன உள்ளது? (ஒன்றுமில்லை);மாண்டு உறுவது -
(ஆதலால்) நாங்கள் இறந்து விடுவதே;நலம் என வலித்தனம் -நல்லதென்று
உறுதி கொண்டோம்;அன்னது வேண்டலின் -அவ்வாறு இறந்து போவதை
(நாங்கள்) விரும்பினபடியால்;நின் உயிர்க்கு உறுதி வேண்டும் -உனது
உயிர் அழியாமல் இருக்க வேண்டும்.

     சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க மாட்டாமல் நாங்கள் மீண்டுபோய்ச்
சொல்வதற்கும் ஒன்றுமில்லை; ஆதலால், நாங்கள் இறந்து விடுவதே
தகுதியென்று தோன்றுகிறது; இளவரசனாயிருப்பதால் நீ உயிருடன் வாழ்வது
மிக இன்றிமையாததாகுமென்று சாம்பவான் கூறினான் என்பது.  ஆல்: ஈற்றசை.
                                                             11

அங்கதன் மறுமொழி

4659. என்று அவன் உரைத்தலும்,
      இருந்த வாலி சேய்,
'குன்று உறழ்ந்தென வளர்
      குவவுத் தோளினீர்!
பொன்றி நீர் மடிய,
      யான் போவெனேல், அது
நன்றதோ? உலகமும்
      நயக்கற்பாலதோ?

     என்று அவன் உரைத்தலும் -இவ்வாறு சாம்பவான் கூறியதும்;இருந்த
வாலி சேய் -
அதனைக் கேட்டிருந்த வாலி மகனான அங்கதன்;குன்று
உறழ்ந்தென -
மலைகள் ஒப்பானவை என்று சொல்லும்படி;வளர் குவவுத்
தோளினீர் -
வளர்ந்துள்ள திரண்டு தோள்களையுடையவர்களே!நீர் பொன்றி
மடிய -
நீங்கள் யாவரும் இங்கே இறந்தொழிய;யான் போவனேல் -
நான்மட்டும் உயிரோடு தனியே திரும்பிப் போவேனானால்;அது நன்றதோ -
அச் செயல் நல்லதாகுமோ?உலகமும் -உலகில் வாழும் சான்றோராலும்;
நயக்கற்பாலதோ -
விரும்பத் தக்கதாகுமோ? (ஆகாது).

     நன்றது: 'அது' பகுதிப் பொருள் விகுதி.  'நீங்கள் அனைவரும் மடிய
நான் மட்டும் திரும்பிச் செல்வது நல்லதா? அதை உலகத்தவர்தான்
விரும்புவார்களோ?' என்று அங்கதன் கேட்டான் என்பது.              12

4660.'  ''சான்றவர் பழி உரைக்கு
      அஞ்சித் தன் உயிர்
போன்றவர் மடிதர,
     போந்துளான்'' என