(இராமலக்குவர் இறந்த) அந்தச் செய்தி;மல்லல் நீர் அயோத்தி புக்கால் - வளம் பொருந்திய நீர் நீறைந்த அயோத்தி நகருக்கு எட்டினால்;பர தன் மற்றோர் -பரதனும் அங்குள்ள மற்றவரும்;வாழ்வரோ -உயிர் வாழ்வார்களோ? நமது முடிவைத் தாரையும சுக்கிரீவனும் மற்றவரால் அறிவார்கள். அதனால் அவர்க்கும் இராமலக்குவர்க்கும், பரதன் முதலியோர்க்கும் மரணமுண்டாகலாம் என வருந்தினான் அங்கதன் என்பது. 'சாதலை'த் 'துஞ்சுதல்' என்றது மங்கலவழக்கு. 14 | 4662. | 'பரதனும், பின்னுளோனும், பயந்தெடுத்தவரும், ஊரும், சரதமே முடிவர்; கெட்டேன்! ''சனகி'' என்று உலகம் சாற்றும் விரத மா தவத்தின் மிக்க விளக்கினால், உலகத்து யார்க்கும் கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா!' எனக் கலுழ்ந்தான். |
பரதனும் -பரதனும்;பின் உளோனும் -(அவனுக்குப் பின் பிறந்தவனான) சத்துருக்கனனும்;பயந்து எடுத்தவரும் -(இராமன் முதலிய நால்வரையும்) பெற்றெடுத்த தாய்மார் (கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகிய) மூவரும்;ஊரும் -அந்த அயோத்தி நகர மக்களும்;சரதமே முடிவர் - மெய்யாகவே இறப்பார்கள்;கெட்டேன் -ஆ! கெடுவேன்;சனகி என்று உலகம் சாற்றும் -சீதை என்று உலகத்துச் சான்றோர் பாராட்டிக் கூறும்; விரத மா தவத்தின்மிக்க -விரதத்தோடு கூடிய பெருந்தவத்தால் மேம்பட்ட; விளக்கினார் -விளக்குப் போன்றவளான ஒரு மகளால்;உலகத்து யார்க்கும் -உலகத்திலுள்ள எவர்க்கும்;கரை தெரிவு இலாத துன்பம் -கரைகாண முடியாத பெருந்துன்பம்;விளைந்த ஆ -வந்து சேர்ந்ததே;என -என்று சொல்லி;கலுழ்ந்தான் -(அங்கதன்) கலங்கி வருந்தினான். ஊர்: இடவாகுபெயர். சீதை பிறந்த குலத்திற்கும் புகுந்த குலத்திற்கும் விளக்கம் செய்பவளாதாலால் அவளை விளக்கு என்றார். கெட்டேன் : இரக்கக் குறிப்பையுணர்த்துவது. ஆ: இங்கே இரக்கத்தையும் வியப்பையும் உணர்த்தி நின்றது. இச் செய்யுள் உணர்த்தும் அவலச் சுவை காண்க. 15 சாம்பவான் அங்கதனை நோக்கிக் கூறல் | 4663. | பொருப்பு உறழ் வயிரத் திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் |
|