பக்கம் எண் :

சம்பாதிப் படலம் 659

(இராமலக்குவர் இறந்த) அந்தச் செய்தி;மல்லல் நீர் அயோத்தி புக்கால் -
வளம் பொருந்திய நீர் நீறைந்த அயோத்தி நகருக்கு எட்டினால்;பர தன்
மற்றோர் -
பரதனும் அங்குள்ள மற்றவரும்;வாழ்வரோ -உயிர்
வாழ்வார்களோ?

     நமது முடிவைத் தாரையும சுக்கிரீவனும் மற்றவரால் அறிவார்கள்.
அதனால் அவர்க்கும் இராமலக்குவர்க்கும், பரதன் முதலியோர்க்கும்
மரணமுண்டாகலாம் என வருந்தினான் அங்கதன் என்பது.

     'சாதலை'த் 'துஞ்சுதல்' என்றது மங்கலவழக்கு.                  14

4662.'பரதனும், பின்னுளோனும்,
      பயந்தெடுத்தவரும், ஊரும்,
சரதமே முடிவர்; கெட்டேன்! ''சனகி''
     என்று உலகம் சாற்றும்
விரத மா தவத்தின் மிக்க
      விளக்கினால், உலகத்து யார்க்கும்
கரை தெரிவு இலாத துன்பம்
      விளைந்தவா!' எனக் கலுழ்ந்தான்.

     பரதனும் -பரதனும்;பின் உளோனும் -(அவனுக்குப் பின்
பிறந்தவனான) சத்துருக்கனனும்;பயந்து எடுத்தவரும் -(இராமன் முதலிய
நால்வரையும்) பெற்றெடுத்த தாய்மார் (கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகிய)
மூவரும்;ஊரும் -அந்த அயோத்தி நகர மக்களும்;சரதமே முடிவர் -
மெய்யாகவே இறப்பார்கள்;கெட்டேன் -ஆ! கெடுவேன்;சனகி என்று
உலகம் சாற்றும் -
சீதை என்று உலகத்துச் சான்றோர் பாராட்டிக் கூறும்;
விரத மா தவத்தின்மிக்க -
விரதத்தோடு கூடிய பெருந்தவத்தால் மேம்பட்ட;
விளக்கினார் -
விளக்குப் போன்றவளான ஒரு மகளால்;உலகத்து யார்க்கும்
-
உலகத்திலுள்ள எவர்க்கும்;கரை தெரிவு இலாத துன்பம் -கரைகாண
முடியாத பெருந்துன்பம்;விளைந்த ஆ -வந்து சேர்ந்ததே;என -என்று
சொல்லி;கலுழ்ந்தான் -(அங்கதன்) கலங்கி வருந்தினான்.

     ஊர்: இடவாகுபெயர்.  சீதை பிறந்த குலத்திற்கும் புகுந்த குலத்திற்கும்
விளக்கம் செய்பவளாதாலால் அவளை விளக்கு என்றார்.  கெட்டேன் :
இரக்கக் குறிப்பையுணர்த்துவது. ஆ: இங்கே இரக்கத்தையும் வியப்பையும்
உணர்த்தி நின்றது.

     இச் செய்யுள் உணர்த்தும் அவலச் சுவை காண்க.                15

சாம்பவான் அங்கதனை நோக்கிக் கூறல்

4663.பொருப்பு உறழ் வயிரத் திண் தோள்
      பொரு சினத்து ஆளி போல்வான்