பக்கம் எண் :

66கிட்கிந்தா காண்டம்

 கால்இயல் பொடியினால், நெடிய
     கற் படிவம் ஆம்
ஆலிகைக்கு, அரிய பேர்
     உரு அளித்தருளினான்.

     வேல் இகல் சினவு தாடகை - (அவ்விருவருள் முன்னவனாம்
இராமன்) சூலாயுதத்தை ஏந்தி மாறுபட்டவளாய்ச் சினந்து வருகின்ற தாடகை;
விளிந்து உருள -
இறந்து தரையில் உருளுமாறு;வில் கோலி -வில்லை
வளைத்து;அக்கொடுமையாள்- அக்கொடியவளின்;புதல்வனைக் கொன்று-
மகனான சுபாகுவைக் கொன்று;தன்கால் இயல் பொடியினால்- தன்
கால்களில் பொருந்திய தூளியினால்;நெடிய கல் படிவம் ஆம்-நீண்ட கல்
வடிவமாகக்கிடந்த;ஆலிகைக்கு - அகலிகைக்கு;அரிய பேர் உரு -
பெறுதற்கரிய சிறந்த உருவத்தை;அளித்து அருளினான்-கொடுத்து அருள்
செய்தான்.

     'நல்லுறுப்பு அமையும் நம்பியரில் முன்னவர்' என அடுத்த பாடலில்
வருவது இடைநிலை விளக்காய் இப்பாடலுக்கு எழுவாயாய் நின்றது.       6

3792.'நல்உறுப்பு அமையும் நம்பியரில்
     முன்னவன் - நயந்து,
எல் உறுப்பு அரிய பேர்
     எழு சுடர்க் கடவுள்தன்
பல் இறுத்தவன் வலிக்கு
     அமை தியம்பகம் எனும்
வில் இறுத்தருளினான் - மிதிலை
     புக்க அனைய நாள்.

     நல் உறுப்பு அமையும் -நல்ல உறுப்பிலக்கணம் அமைந்த;நம்பி
யரில் முன்னவன் -
அவ்ஆண் மக்களுள் முன் பிறந்தவனான இராமன்;
மிதிலை புக்க அனைய நாள் -
மிதிலை நகரத்துள் புகுந்த அந்த நாளில்;
எல் உறுப்பு -
ஒளி வீசும் கதிர்களை உறுப்பாக உடைய;அரிய பேரி
எழுசுடர்க் கடவுள்தன் -
அரிய பெரிய சூரிய பகவானின்;பல்
இறுத்தவன்-
பற்களை உதிர்த்தவனாகிய சிவபிரானின்;வலிக்கு அமை -
வலிமைக்குஏற்ப அமைந்த;தியம்பகம் எனும்வில் -'திரியம்பகம்' என்று
சொல்லப்பெறும் வில்லை;நயந்து -(வளைக்க) விரும்பி;இறுத்து
அருளினான் -
ஒடித்து அருளினான்.

     அரச குமாரர்களுக்கு ஏற்ற உறுப்பிலக்கணம் பெற்றவராதலின் 'நல்
உறுப்பு அமையும் நம்பியர்' என்றார்.  ஆடவரில் சிறந்தோர் 'நம்பியர்'
எனப்படுவர்.  எரிசுடர்க்கடவுள் பல்லிறுத்தது - வீரபத்திரனாகச் சிவபிரான்
தக்கன் யாகத்தில் மற்ற தேவர்களோடு வந்திருந்த சூரியனின் பற்களைத்
தகர்த்ததாகக் கூறப்படும் வரலாறு. 'சூரியனார் தொண்டை வாயினில் பற்களை,
வாரி நெரித்தவா உந்தீபற' (திருவாசகம் - திருவுந்தி - 15) என்றது காண்க.