| | தரிப்பு இலாது உரைத்த மாற்றம், தடுப்ப அருந்தகைத்தது ஆய நெருப்பையே விளைத்த போல, நெஞ்சமும் மறுகக் கேட்டு, விருப்பினால் அவனை நோக்கி, விளம்பினன் எண்கின் வேந்தன்: |
பொருப்பு உறழ் -மலையையொத்த;வயிரத் திண் தோள் -உறுதியான வலிய தோள்களையுடைய;பொரு சினத்து ஆளி போல்வான் -போர் புரியும் கடுங்கோபத்தைக் கொண்ட சிங்கம் போன்றவனாகிய அங்கதன் - தரிப்பு இலாது -மனம்பொறாமல்;உரைத்த மாற்றம் -சொன்ன சொற்கள்; தடுப்ப அருந் தகைத்ததாய - தடுக்க முடியாத தன்மை பொருந்திய; நெருப்பையே விளைத்த போல -பெருந்தீயை மூட்டியது போல; நெஞ்சமும் மறுக -மனத்தையும் கலங்கச் செய்ய;கேட்டு -(அதனைக்) கேட்டு;எண்கின் வேந்தன் -கரடிகளின் அரசனான சாம்பவான்; விருப்பினால் அவனை நோக்கி -அன்போடு அந்த அங்கதனைப் பார்த்து; விளம்பினான் -கூறலானான். யாளி என்பது ஆளி என்றாயிற்று. 16 கலிவிருத்தம் | 4664. | 'நீயும் நின் தாதையும் நீங்க, நின் குலத் தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால்; ஆயது கருதினம்; அன்னது அன்று எனின், நாயகர் இறுதியும் நவிலற்பாலதோ? |
நீயும் நின் தாதையும் நீங்க -நீயும் உன் தந்தையான சுக்கிரீவனும் தவிர;நின்குலத் தாயம் வந்தவரொடும் -உன் குலத்தில் உரிமையுடை யவராய்ப் பிறந்தவர்க்கு;தனையர் இல்லை -வேறு ஒரு மகன் இல்லை; ஆயது கருதினம் -(அது கருதியே) நீ உயிர் நீங்காது சுக்கிரீவனைச் சேர்க என்று கூறினோம்;அன்னது அன்று எனில் -அவ்வாறு இல்லாவிட்டாலும்; நாயகர் இறுதியும் -(நம்) தலைவர்களின் மரணமும்;நவிலற் பாலதோ - (நாம்) பேசத் தக்கது ஆகுமோ? (தகாது). உங்கள் அரச மரபில் இப்போது வேறு புதல்வர் இல்லாததாலும், எங்களைப் போன்ற எளியவரது மரணமின்றி உங்களைப் போன்ற இளவரசர் மரணம் குறித்து வாயினாற் சொல்லுதலும் கூடாதாதலாலும் நீ உயிர்விடுவேன் என்று கூறுவது சிறிதும் தகாது; ஆதலால் நாங்களெல்லாரும் உயிர் நீங்க, நீ சுக்கிரீவனைச் சென்ற சேர்வாய் என்பது. தாயம்: சொத்திலுள்ளஉரிமை. 17 | 4665. | 'ஏகு நீ; அவ் வழி எய்தி, இவ் வழித் |
|