பக்கம் எண் :

660கிட்கிந்தா காண்டம்

 தரிப்பு இலாது உரைத்த மாற்றம்,
      தடுப்ப அருந்தகைத்தது ஆய
நெருப்பையே விளைத்த போல,
      நெஞ்சமும் மறுகக் கேட்டு,
விருப்பினால் அவனை நோக்கி,
      விளம்பினன் எண்கின் வேந்தன்:

பொருப்பு உறழ் -மலையையொத்த;வயிரத் திண் தோள் -உறுதியான
வலிய தோள்களையுடைய;பொரு சினத்து ஆளி போல்வான் -போர்
புரியும் கடுங்கோபத்தைக் கொண்ட சிங்கம் போன்றவனாகிய அங்கதன் -
தரிப்பு இலாது -
மனம்பொறாமல்;உரைத்த மாற்றம் -சொன்ன சொற்கள்;
தடுப்ப அருந் தகைத்ததாய -
தடுக்க முடியாத தன்மை பொருந்திய;
நெருப்பையே விளைத்த போல -
பெருந்தீயை மூட்டியது போல;
நெஞ்சமும் மறுக -
மனத்தையும் கலங்கச் செய்ய;கேட்டு -(அதனைக்)
கேட்டு;எண்கின் வேந்தன் -கரடிகளின் அரசனான சாம்பவான்;
விருப்பினால் அவனை நோக்கி -
அன்போடு அந்த அங்கதனைப் பார்த்து;
விளம்பினான் -
கூறலானான்.

     யாளி என்பது ஆளி என்றாயிற்று.                             16

கலிவிருத்தம்

4664. 'நீயும் நின் தாதையும் நீங்க, நின் குலத்
தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால்;
ஆயது கருதினம்; அன்னது அன்று எனின்,
நாயகர் இறுதியும் நவிலற்பாலதோ?

     நீயும் நின் தாதையும் நீங்க -நீயும் உன் தந்தையான சுக்கிரீவனும்
தவிர;நின்குலத் தாயம் வந்தவரொடும் -உன் குலத்தில் உரிமையுடை
யவராய்ப் பிறந்தவர்க்கு;தனையர் இல்லை -வேறு ஒரு மகன் இல்லை;
ஆயது கருதினம் -
(அது கருதியே) நீ உயிர் நீங்காது சுக்கிரீவனைச்  சேர்க
என்று கூறினோம்;அன்னது அன்று எனில் -அவ்வாறு இல்லாவிட்டாலும்;
நாயகர் இறுதியும் -
(நம்) தலைவர்களின் மரணமும்;நவிலற் பாலதோ -
(நாம்) பேசத் தக்கது ஆகுமோ? (தகாது).

     உங்கள் அரச மரபில் இப்போது வேறு புதல்வர் இல்லாததாலும்,
எங்களைப் போன்ற எளியவரது மரணமின்றி உங்களைப் போன்ற இளவரசர்
மரணம் குறித்து வாயினாற் சொல்லுதலும் கூடாதாதலாலும் நீ உயிர்விடுவேன்
என்று கூறுவது சிறிதும் தகாது; ஆதலால் நாங்களெல்லாரும் உயிர் நீங்க, நீ
சுக்கிரீவனைச் சென்ற சேர்வாய் என்பது. தாயம்: சொத்திலுள்ளஉரிமை.   17

4665.'ஏகு நீ; அவ் வழி
      எய்தி, இவ் வழித்