பக்கம் எண் :

சம்பாதிப் படலம் 661

 தோகையைக் கண்டிலா வகையும்
      சொல்லி, எம்
சாகையும் உணர்த்துதி; தவிர்தி
      சோகம்; - போர்
வாகையாய்!' என்றனன் -
      வரம்பு இல் ஆற்றலான்.

     வரம்பு இல் ஆற்றலான் -எல்லையற்ற ஆற்றல் கொண்ட சாம்பவான்
(அங்கதனை நோக்கி);போர் வகையாய் -போரில் வெற்றி வெறும்
ஆற்றலுடையவனே!ஏகு நீ -நீ (உயிருடன்) போவாயாக;அவ்வழி எய்தி -
(இராமனும் சுக்கிரீவனும் இருக்கின்ற) அந்த இடத்தைச் சேர்ந்து;இவ் வழி -
இந்த இடமெங்கும்;தோகையைக் கண்டிலா வகையும் -மயில் போன்ற
சீதையை நாம் காணமுடியாத திறத்தையும்;சொல்லி -தெரிவித்து;எம்
சாகையும் உணர்த்துதி -
எங்களது மரணச் செய்தியையும் தெரிவிப்பாய்;
சோகம் தவிர்தி -
வருந்துவதை விடு;என்றனன் -என்று கூறினான்.

     செய் அல்லது செத்துமடி என்பது உண்மை வீரருக்கு இலக்கு;
பிராட்டியின் இருப்பிடம் காணவியலாமையால் தாங்கள் உயிர்விடுதலே
வீரமாகும்.  எனவே, 'சோகம் தவிர்தி' என்றான்.  சாகை - சாவு. தோகை:
உவமையாகுபெயர்.                                            18

அனுமன் கூற்று

4666. அவன் அவை உரைத்தபின்,
      அனுமன் சொல்லுவான்:
'புவனம் மூன்றினும் ஒரு
      புடையில் புக்கிலம்;
கவனம் மாண்டவர் என,
      கருத்திலார் என,
தவன வேகத்தினீர்!
      சலித்திரோ?' என்றான்.

     அவன் அவை உரைத்தபின் -அந்தச் சாம்பவான் அவ்வாறு
உரைத்தபின்னால்;அனுமன் சொல்லுவான் -அனுமன் கூறுவான்;தவன
வேகத்தினீர் -
சூரியன் போன்ற வேகத்தையுடையவர்களே!புவனம்
மூன்றினும் -
(நாம் சீதையை) மூன்று உலகங்களிலும்;ஒரு புடையில்
புக்கிலம் -
ஒரு பக்கத்தில் கூட (நாம்) முழுவதும் போய்த் தேடிப் பார்க்க
வில்லை (அப்படியிருக்க);கவனம் மாண்டவர் என -செல்லும் வேகம்
குறைந்தவர்போலவும்;கருத்து இலார் என -(நாம் மேற்கொண்ட செயலைப்
பற்றி) எண்ணிப்பார்க்கும் திறமில்லாதவர் போலவும்;சலித்திரோ -
சலிப்படைந்து விட்டீரோ? என்றான் -என்று கேட்டான்.