பக்கம் எண் :

664கிட்கிந்தா காண்டம்

4670.'முறையுடை எம்பியார் முடிந்தவா' எனாப்
பறையிடு நெஞ்சினன், பதைக்கும் மேனியன்,
இறையுடைக் குலிசவேல் எறிதலால், முனம்
சிறை அறு மலை எனச் செல்லும் செய்கையான்;

     முறையுடை எம்பியார் முடிந்த ஆ -நீதிமுறையைத் தனக்கு
உரிமையாகவுடைய என் தம்பி சடாயு இறந்தவாறு என்னே!எனா -என்று;
பறை இடு நெஞ்சினன் -
பறையடிப்பது போலத்துடிக்கின்ற
நெஞ்சையுடையவனும்;பதைக்கும் மேனியன் -தவித்துத் துடிக்கும்
உடம்பையுடையவனும்;இறையுடைக் குலிசம் வேல் எறிதலால் -
தேவேந்திரன் தன் வச்சிரப் படையை வீசியெறிந்ததால்;முனம் சிறை அறும்
மலை என -
முற்காலத்தில் சிறகுகள் அறுபட்டுப்போன மலையைப் போல;
செல்லும் செய்கையான் -
செல்லும் செயலையுடையவனானான்.

     முற்காலத்தில் மலைகள் இறகுள்ளனவாயிருந்து பறந்த மக்களின்மேல்
விழுந்து அழித்ததால், இந்திரன் அவற்றின் சிறகுகளை அரிந்தான் என்பது
புராணக் கதை.  சிறகுகள் அறுபட்ட மலை சிறகுகள் கரிந்துவிட்ட சம்பாதிக்கு
ஏற்ற உவமையாம்.

     எம்பியார் - பால்வழுவமைதி (பாசத்தால் வந்தது); தம்பி
இளையவனாதலால் எம்பி என்று இருப்பது முறை; 'ஆர் என்ற மரியாதைப்
பன்மை விகுதி சேர்த்து வழு; தம்பியை நினைத்த பாசத்தால் எம்பியார் என
அமைந்தது.                                                    23

4671.'மிடலுடை எம்பியை வீட்டும் வெஞ் சினப்
படையுளர் ஆயினார்' பாரில் யார்?' எனா,
உடலினை வழிந்து போய், உவரி நீர் உக,
கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான்;

     மிடலுடை எம்பியை -வலிமையுடைய என்தம்பியை;வீட்டும் -
அழிக்கக் கூடிய;வெஞ்சினப் படையுளர் ஆயினார் -கொடிய
கோபத்தோடு தாக்கும் படைக்கலங்களைக் கொண்டவர்;பாரில் யார்? -இந்த
உலகத்தில் எவர் உள்ளனர்? எனா -என்று சொல்லி வருந்தி;உடலினை
வழிந்துபோய் -
உடம்பிலிருந்து கீழே விழுந்துபோய்;உவரி நீர் உக -
கடலில் சேருமாறு;கடலினைப் புரை உறும் அருவிக் கண்ணினான் -
அந்தப் பெரிய கடலைப் போல நீர்ப்பெருக்குடைய கண் களையுடையவனும்.

     தன் அன்பான தம்பியின் மரணத்தை நினைந்து சம்பாதி கடல்போலக்
கண்ணீரைப் பெருக்கினான் என்பது.

     உடலினை: உருபு மயக்கம்.                                  24

4672. உழும் கதிர் மணி
      அணி உமிழும் மின்னினான்;