பக்கம் எண் :

சம்பாதிப் படலம் 665

 மழுங்கிய நெடுங் கணின்
      வழங்கும் மாரியான்;
புழுங்குவான்,
      அழுங்கினான; புடவிமீதினில்,
முழங்கி, வந்து, இழிவது
      ஓர் முகிலும் போல்கின்றான்;

     உழும் கதிர் மணி -சாணை பிடித்த ஒளிபொருந்திய மணிகளைக்
கொண்டு செய்த;அணி உமிழும் மின்னினான் -அணிகலன்கள்
ஒளிவிடுகின்ற மின்னலையுடையவனும்;மழுங்கிய நெடுங்கணின் -ஒளி
மங்கிய தன் நீண்ட கண்களிலிருந்து;வழங்கும் மாரியான் -வழிகின்ற
நீர்த்துளிகளையுடையவனும்;புழுங்குவான் அழுங்கினான் -துயரத்தால்
மனம் வருந்துபவனாய் வாய்விட்டுக் கதறுபவனும்;புடவி மீதினில் -
பூமியின்மேல்;முழங்கிவந்து -குமறிக் கொண்டே வந்து;இழிவது -கீழே
இறங்குவதான;ஓர் முகிலும் போல்கின்றான் -ஒரு மேகத்தை
ஒத்திருப்பவனும்.

     மின்னியிடித்து நீரைச் சொரிகின்ற மேகம், இரத்தின அணிகலன்களால்
ஒளி வீசிக் கொண்டும், வாயினால் கதறிக் கொண்டும், கண்ணீரைச் சொரிந்து
கொண்டுமிருக்கின்ற சம்பாதிக்கு உவமையாம்.  இல்பொருள் உவமை.

     சம்பாதி பெரிய உருவத்துடன் பூமியின்மேல் நடந்து வருவதால் பூமியின்
மேல் இழியும் மேகம் போன்றான் என்று குறித்தார்.                    25

4673.வள்ளியும் மரங்களும் மலையும்
      மண் உற,
தெள்ளு நுண் பொடிபட,
      கடிது செல்கின்றான்;
தள்ளு வன் கால்
      பொர, தரணியில் தவழ்
வெள்ளி அம் பெரு
      மலை பொருவு மேனியான்;

     வள்ளியும் -கொடிகளும்;மரங்களும் -பலவகையான மரங்களும்;
மலையும் -
மலைகளும்;மண் உற -மண்ணோடு மண்ணாகும் படி;தெள்ளு
நுண் பொடிபட -
தெள்ளிய நுண்மையான பொடியாகுமாறு;கடிது
செல்கின்றான் -
விரைவாகச்சென்றான்;தள்ளு வன்கால் பொர -
எல்லாவற்றையும் தாக்கித் தள்ளவல்ல வலிய காற்று மோதுவதால்;தரணியில்
தவழ் -
பூமியில் தவழ்ந்து வருகின்ற;வெள்ளி அம் பெருமலை -அழகிய
வெள்ளிமயமான கைலாய மலையை;பொருவும் மேனியான் -ஒத்த
உருவமுடையவனும் (ஆகி).