தனக்கு ஏற்பட்டுள்ள சோர்வைச் சம்பாதி இவ்வாற புலப்படுத்துகிறான். இடை(தல்) - சோர்தல். என்பு: ஆகுபெயர். 31 அனுமன், சடாயு இறந்தமை உரைத்தல் | 4679. | கூறிய வாசகம் கேட்ட, கோது இலான் ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா ஏறினன், உணர்த்தினன், 'இகல் இராவணன் வீறிய வாளிடை விளிந்தது ஆம்' என்றான். |
கூறிய வாசகம் கேட்ட -சம்பாதி சொன்னவற்றைக் கேட்ட;கோது இலான் -குற்றமற்றவனான அனுமன்;ஊறிய துன்பத்தின் உவரியுள்புகா - மிக்க துன்பமாகிய கடலினுள் மூழ்கி;ஏறினான் -அதிலிருந்து ஒருவாறு கரையேறினவனாகி;இகல் இராவணன் -(சடாயுவோடு) போர் புரிந்த இராவணன்;வீறிய வாளிடை -வீசிய வாளினால்;விளிந்தது ஆம் -உன் தம்பியின் மரணம் நேர்ந்ததாகும்;என்றான் உணர்த்தினன் -என்று தெரிவித்தான். சம்பாதியின் சொல் மனத்தைக் கரையச் செய்ததால் அதைக் கேட்ட அனுமன் துயர்க் கடலிலே மூழ்கிப்பின் ஒருவாறு தெளிந்தான் என்பது. வீறிய வாள்: இராவணனுக்குச் சிவன் தந்த சந்திரகாசமென்னும் வாள்; எனவே, பிறிதொன்றற்கு இல்லாத சிறப்புடையது. புகா: செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம். 32 சம்பாதி புலம்பல் | 4680. | அவ் வுரை கேட்டலும், அசனி ஏற்றினால் தவ்விய கிரி எனத் தரையின் வீழ்ந்தனன்; வெவ் உயிரா உயிர் பதைப்ப, விம்மினான்; இவ் உரை, இவ் உரை, எடுத்து இயம்பினான்: |
அவ் உரை கேட்டலும் -(அனுமன் கூறிய) அந்தச் சொற்களைக் கேட்டதும் (சம்பாதி);அசனி ஏற்றினால் -பேரிடியினால்;தவ்விய கிரி என-சிதைந்த மலை போல;தரையில் வீழ்ந்தனன் -தரைமீது விழுந்தான்; வெவ் உயிரா -வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு;உயிர் பதைப்ப -உயிர் துடிக்க;விம்மினான் -தேம்பி வருந்தியவனாகி;இவ்உரை இவ்உரை -இந்த இந்தச் சொற்களை;எடுத்து இயம்பினான் -எடுத்து எடுத்துச் சொல்லிப் புலம்பினான். ஏறு: சிறந்ததையும், பெரியதையும் 'ஏறு' என்றல் மரபு. கீழே விழுதலும், வெப்பமாகப் பெருமூச் செறிதலும், உயிர் பதைத்தலும், விம்முதலும் துயரத்தின் மெய்ப்பாடுகள். இவ்வுரை இவ்வுரை என்ற அடுக்கு: சோகத்தின் பலவற்றைக் கூறுவதைக் குறிக்கும். தவ்வுதல்:சிதைதல். 33 |