தவறாதவனான அவன்;வண்டு ஆர் கோதையை -வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய அச் சீதையை;வைத்து நீங்கு -விட்டுவிட்டு அப்பாலே செல்; எனா -என்று கூறி;திண்தேரான் எதிர் சென்று -வலிய தேரையுடைய அந்த இராவணன் எதிரே சென்று;சீறினான் -மனங் கொதித்து எதிர்த்தான். அறங் கடக்கலான்: இந்த அடைமொழி பிறர் மனைவியைக் கவர்வதைக் கண்டு மனங்கொதிப்பதற்கு ஏற்றவன் என்ற கருத்தைப் புலப்படுத்தும். அறங் கடவாத சடாயுவை அறநெறி நின்றுளோர்க் கெலாம் மாணியை' - (3449) என முன்னும் கூறினார். சொல்லிய அறநெறி தொடர்ந்து தோழமை நல்லியல் அருங்கடன் கழித்த நம்பியை' - (3451) என்றதும் காண்க. கண்டான்:முற்றெச்சம். 41 | 4689. | 'சீறி, தீயவன் ஏறு தேரையும் கீறி, தோள்கள் கிழித்து அழித்த பின், தேறி, தேவர்கள் தேவன் தெய்வ வாள் வீற, பொன்றினன் மெய்ம்மையோன்' என்றான். |
மெய்ம்மையோன் -எப்பொழுதும் அறவழியிலேயே நிற்கும் சடாயு; சீறி -கோபித்து;தீயவன் ஏறு தேரையும் கீறி -கொடியவனான அந்த இராவணன் தேரையும் அழித்து;தோள்கள் கிழித்து -(அவன்) தோள்களையும் பிளந்து;அழித்தபின் -அவனுக்குத் தோல்வியை உண்டாக்கின பிறகு;தேறி -(இராவணன்) சடாயுவை வெல்லும் நெறியைத் துணிந்து;தேவர்கள் தேவன் -தேவர்களுக்கும் தேவனான சிவபெருமான்; தெய்வ வாள் வீற -(தனக்கு அளித்த) தெய்வத் தன்மையுள்ள சந்திரகாசம் என்னும் வாள் வெற்றிபெற;பொன்றினன் -சடாயு (சிறகுகள் அறுபட்டு) உயிர்மாய்ந்தான்;என்றான் -என்று (அனுமன்) கூறி முடித்தான். சடாயு இராவணனைத் தன் மூக்கினாலும் நகங்களாலும் சிறகுகளாலும் பலவாறு துன்புறுத்தி, இறுதியில் அந்தக் கொடியவனது தெய்வ வாளால் உயிர் மாய்ந்தான் என்றான் அனுமன் என்பது. மும்மூர்த்திகளுள் ஒருவனாதலால் சிவன் 'தேவர்கள் தேவன்' எனப்பட்டான். வீறு என்ற சொல் பிறிதொன்றுக்கும் இல்லாத சிறப்பினைக் குறிக்கும். சிவபெருமான் கொடுத்தருளிய வாள் வீறுபெற (சிறப்பான வெற்றிபெற) என்றது அவ்வாளின் ஒப்பரிய சிறப்பினைப்புலப்படுத்திற்று. 42 சம்பாதி சடாயுவைப் பாராட்டுதல் | 4690. | விளித்தான் அன்னது கேட்டு 'மெய்ம்மையோய்! தெளித்து ஆடத் தகு தீர்த்தன்மாட்டு, உயிர் |
|