பக்கம் எண் :

மயேந்திரப் படலம் 697

     மேரு கிரிக்கும் மீது உற -மேரு மலைக்கும் மேலாக;நிற்கும் -
ஓங்கி நிற்கும்; பெரு மெய்யீர் -பெரிய உடம்பையுடையீர்;மாரி துளிக்கும்
தாரை இடுக்கும் -
மேகங்கள் சொரியும் மழைத்துளிகளின் நடுவிடும்;வர
வல்லீர் -
(சிறு வடிவெடுத்து) நுழைந்து வரும் வல்லமையுடையீர்!பாரை
எடுக்கும் நோன்மை வலத்தீர் -
இப் பூமியையே பேர்த்தெடுக்கும் மிக்க
வலிமையுடையவராவீர்! பழி அற்றீர் -(பெரு வரங்களைத் தீய வழியில்
செலுத்தாததால் சிறிதும்) பழிப்பில்லாத வராவீர்;சென்று ஒண் கையகத்தும் -
மேலே சென்று அழகிய கைகளாலும்;சூரியனைத் தொடவல்லீர் -சூரிய
தேவனைத் தொடவும் வல்லவராவீர்.

     அனுமன் தன் உடம்பு வளரவேண்டுமென்று நினைத்தால்
மேருமலையைக் காட்டிலும் அவனுடம்பு பெரியதாகும்; அந்த உடம்பைச்
சிறிதாக ஒடுக்க விரும்பினால் அணுவைக் காட்டிலும் அவனுடம்பு சிறியதாகும்
என்பது. இவ்விரண்டும் யோக சித்திகளும் முறையே மகிமா, அணிமா என்னும்
சித்திகளாகும்.  தாரை: நீரொழுக்கு. நோன்மை வலம்: ஒரு பொருட் பன்மொழி.
மேரு கிரிக்கும்: உம்மை உயர்வு சிறப்பு. ஒப்பு: 'பிறியா அறத்தின் அனுமன்
வளர்ச்சி பெரு மேருவினிற் பெரியனாம்; சிறிதா யொடுக்குமெனின் மேனியற்ப
அணுவானதிற் சிறியனாம்' - (உத்தர -அனுமப்.7)                      12

4723.'அறிந்து, திறத்து ஆறு எண்ணி,
     அறத்து ஆறு அழியாமை
மறிந்து உருள, போர் வாலியை
      வெல்லும் மதி வல்லீர்;
பொறிந்து இமையோர் கோன் வச்சிர
      பாணம் புக மூழ்க
எறிந்துழி, இற்றுஓர் புன்
      மயிரேனும் இழவாதீர்;

     திறத்து ஆறு -உரிய வழிகளை;எண்ணி அறிந்து -ஆராய்ந்து
அறிந்து;அறத்து ஆறு அழியாமை -(அரசர்க்குரிய) அறநெறி தவறாமல்;
போர் வாலியை -
போர்த் திறமை மிக்க வாலியென்பவனை;மறிந்து உருள
வெல்லும் -
குப்புற விழுந்து உருளும்படி வெல்லச் செய்த;மதி வல்லீர் -
அறிவின் வல்லமையுடையீர்;இமையோர் கோன் -தேவர்களுக்குத்
தலைவனான இந்திரன்;பொறிந்து -(கண்களில்) தீப்பொறியைக் கக்கிக்
கொண்டு;வச்சிர பாணம் புக மூழ்க எறிந்துழி -வச்சிராயுதத்தை உடம்பில்
மூழ்குமாறு எறிந்தபோது;ஓர் புன்மயிரேனும் -ஒரு சிறி மயிர்கூட;இற்று
இழவாதீர் -
அறுபட்டு இழவாதவரும் ஆவீர்!

     அறத்தின் வழிக்குச் சிதைவு வராத வகையில் போர்வல்ல வாலியை
அழிவிக்கும் அறிவில் வல்லவன் என்று மாருதியைக் குறிப்பிடும் பாங்கு
எண்ணுதற்கு உரியது.  'தருமத்தின் தனிமை தீர்ப்பான்' (3781) எனவும்.
அறத்துக்கு ஆங்கொரு