மேரு கிரிக்கும் மீது உற -மேரு மலைக்கும் மேலாக;நிற்கும் - ஓங்கி நிற்கும்; பெரு மெய்யீர் -பெரிய உடம்பையுடையீர்;மாரி துளிக்கும் தாரை இடுக்கும் -மேகங்கள் சொரியும் மழைத்துளிகளின் நடுவிடும்;வர வல்லீர் -(சிறு வடிவெடுத்து) நுழைந்து வரும் வல்லமையுடையீர்!பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் -இப் பூமியையே பேர்த்தெடுக்கும் மிக்க வலிமையுடையவராவீர்! பழி அற்றீர் -(பெரு வரங்களைத் தீய வழியில் செலுத்தாததால் சிறிதும்) பழிப்பில்லாத வராவீர்;சென்று ஒண் கையகத்தும் - மேலே சென்று அழகிய கைகளாலும்;சூரியனைத் தொடவல்லீர் -சூரிய தேவனைத் தொடவும் வல்லவராவீர். அனுமன் தன் உடம்பு வளரவேண்டுமென்று நினைத்தால் மேருமலையைக் காட்டிலும் அவனுடம்பு பெரியதாகும்; அந்த உடம்பைச் சிறிதாக ஒடுக்க விரும்பினால் அணுவைக் காட்டிலும் அவனுடம்பு சிறியதாகும் என்பது. இவ்விரண்டும் யோக சித்திகளும் முறையே மகிமா, அணிமா என்னும் சித்திகளாகும். தாரை: நீரொழுக்கு. நோன்மை வலம்: ஒரு பொருட் பன்மொழி. மேரு கிரிக்கும்: உம்மை உயர்வு சிறப்பு. ஒப்பு: 'பிறியா அறத்தின் அனுமன் வளர்ச்சி பெரு மேருவினிற் பெரியனாம்; சிறிதா யொடுக்குமெனின் மேனியற்ப அணுவானதிற் சிறியனாம்' - (உத்தர -அனுமப்.7) 12 4723. | 'அறிந்து, திறத்து ஆறு எண்ணி, அறத்து ஆறு அழியாமை மறிந்து உருள, போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்; பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க எறிந்துழி, இற்றுஓர் புன் மயிரேனும் இழவாதீர்; |
திறத்து ஆறு -உரிய வழிகளை;எண்ணி அறிந்து -ஆராய்ந்து அறிந்து;அறத்து ஆறு அழியாமை -(அரசர்க்குரிய) அறநெறி தவறாமல்; போர் வாலியை -போர்த் திறமை மிக்க வாலியென்பவனை;மறிந்து உருள வெல்லும் -குப்புற விழுந்து உருளும்படி வெல்லச் செய்த;மதி வல்லீர் - அறிவின் வல்லமையுடையீர்;இமையோர் கோன் -தேவர்களுக்குத் தலைவனான இந்திரன்;பொறிந்து -(கண்களில்) தீப்பொறியைக் கக்கிக் கொண்டு;வச்சிர பாணம் புக மூழ்க எறிந்துழி -வச்சிராயுதத்தை உடம்பில் மூழ்குமாறு எறிந்தபோது;ஓர் புன்மயிரேனும் -ஒரு சிறி மயிர்கூட;இற்று இழவாதீர் -அறுபட்டு இழவாதவரும் ஆவீர்! அறத்தின் வழிக்குச் சிதைவு வராத வகையில் போர்வல்ல வாலியை அழிவிக்கும் அறிவில் வல்லவன் என்று மாருதியைக் குறிப்பிடும் பாங்கு எண்ணுதற்கு உரியது. 'தருமத்தின் தனிமை தீர்ப்பான்' (3781) எனவும். அறத்துக்கு ஆங்கொரு |