சுந்தர காண்டம் கடவுள் வாழ்த்து அறுசீர் விருத்தம் | 4740. | அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் கலங்குவது எவரைக் கண்டால் ? அவர், என்பர்- கைவில் ஏந்தி, இலங்கையில் பொருதார்; அன்றே, மறைகளுக்கு இறுதி யாவார்! |
மறைகளுக்குஇறுதியாவார்- வேதத்தின் எல்லை நிலமாக இருக்கின்ற ஞானிகள்; எவரைக் கண்டால் - எவரைத் தரிசித்த உடனே; விலங்கிய பூதம் ஐந்தும் - ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும்; வேறுபாடுஉற்ற வீக்கம் - வேறு வேறு விதமாக அமைந்த பன்மைத் தோற்றம்;அலங்கலில் தோன்றும் பொய்ம்மை - மாலையில் தோற்றமளித்த பொய்;அரவு என - பாம்பு போல; கலங்குவது - இல்லாது போதல் (நிகழுமோ):அவர் அன்றே - அவர் அல்லவா; கைவில் ஏந்தி - கரத்திலே கோதண்டத்தைத் தாங்கி; இலங்கையில் பொருதார் - இலங்கை மாநகரத்தில் போர் செய்தவர்; என்பர் - என்று கூறுவர். பொய்யான பாம்பு மெய்யான மாலையைக் கண்டு உண்மை தெரிந்தவுடன் மறையும். அதுபோலப் பொய்யான பிரபஞ்சம் மெய்யான பரம்பொருளைப் பார்த்ததும் மறையும். மெய்யுணர்ச்சி தோன்றியதும் பிரபஞ்சம் இறைவனாகவோ இறைவனின் மேனியாகவோ தோன்றும். உள்ளது - மாலை; உள்ளது - பரம்பொருள்; இல்லது - பாம்பு; இல்லது - பிரபஞ்சம். பிரபஞ்சத் தோற்றத்துக்கு ஆதாரமான பரம்பொருள் வில்லேந்தி வந்தது. ஐந்து பூதங்களும்தம்மிற் கலத்தலால் விகாரங்கள் உண்டாயின. கலத்தல்இது பஞ்சீகரணம் என்று பேசப்படும். ஈண்டுப் பூதம் என்றது |