| | மேக்குறவிசைத்தார் என்னப் பொலிந்தனர்-விஞ்சை வேந்தர். |
தேக்கு உறுசிகரக் குன்றம்- தேக்கு மரங்கள் மிகுதியாகப் பெற்ற மகேந்திர மலை; திரிந்து - தன் இயல்பு வேறுபட்டு; மெய்ந் நெரிந்து சிந்த -உடல் சிதைந்து சிதற (அதனால்); விஞ்சை வேந்தர் - வித்தியாதரத் தலைவர்கள்; தூக்குறு தோலர் - உயர்த்திப் பற்றிய கேடகமுடையவராய்; வாளர் - வாளை ஏந்தியவராய்; துரிதத்தின் எழுந்த தோற்றம் - வேகமாக எழுந்த காட்சி; தாக்குறு செருவில் - மோதிச் செய்கின்ற போரில்; நேர்ந்தார்தாள்அற வீச - எதிர்த்த பகைவர்களின் முயற்சியற்றுப் போக ஆயுதங்களைச்சுழற்ற; மேக்கு உறத் தாவி - வானிலே நன்றாகப் பாய்ந்து; விசைத்தார்என்னப் பொலிந்தனர் - வேகம் பெற்றவர்களைப் போல விளங்கினார்கள். சலிப்பற்றதுமலை. அஃது இன்று சலித்தது. நிலை திரிந்தது. சுழன்றது; அதனால் அங்குள்ள வித்தியாதரத் தலைவர்கள் ஏந்திய கேடகத்தோடும் தாங்கிய வாளோடும் விண்ணில் சென்றனர். அக் காட்சி பகைவரைத் தாக்க எழுந்தது போல் இருந்தது. பகைவரால் தாக்கப்பெற்று மேல் எழுந்த வீரர் என்றும் பொருள் கொள்ளலாம். (7) 4748. | தாரகை,சுடர்கள், மேகம் என்று இவைதவிரத் தாழ்ந்து, பாரிடை அழுந்துகின்ற படர்நெடும்பனிமாக் குன்றம், கூர் உகிர்க்குவவுத் தோளான் கூம்புஎனக்குமிழி பொங்க ஆர் கலி அழுவத்துஆழும் கலம் எனல்ஆயிற்று அன்றே. |
தாரகை சுடர்கள்மேகம் என்று இவை- நட்சத்திரம், சூரிய சந்திரர்கள்; மேகம் என்னும் இப்பொருள்கள்; தவிர - (சார்ந்து வராமல்) நீங்கிநிற்க; தாழ்ந்து - இறங்கி; பாரிடை அழுந்துகின்ற - பூமியின்கண் கீழ்நோக்கிப் போகும்; படர்நெடும் பனிமாக் குன்றம் - விரிந்து நீண்ட குளி்ர்ந்த மலை; கூர்உகிர் குவவுத் தோளான் - கூர்மையான நகங்களையும் திரண்ட தோள்களையும் உடைய அனுமன்; கூம்புஎன - பாய்மரம் போலிருக்க; ஆர்கலி அழுவத்து - கடலின் ஆழத்திலே; குமிழி பொங்க -நீர்க்குமிழிகள் கொந்தளிக்க; |