பக்கம் எண் :

ஊர் தேடு படலம்115

4905.

அளக்கஅரிதுஆகிய கணக்கொடு அயல்நிற்கும்
விளக்குஇனம்இருட்டினை விழுங்கி ஒளிகால
உளக்கடிய காலன்மனம் உட்கும் மணிவாயில்
இளக்கம்இல்கடற்படை இருக்கையை எதிர்ந்தான்.

     அளக்க - அளந்துகாண்பதற்கு; அரிது ஆகிய - கடினமாக உள்ள;
கணக்கொடு - கூட்டத்துடன்; அயல் நிற்கும் - பக்கத்தே நிற்கின்ற; விளக்
குஇனம் -
விளக்குக் கூட்டம்; இருட்டினை விழுங்கி - இருளை உட்கொண்
டு;ஒளிகால - வெளிச்சத்தை வெளிப்படுத்த (அதனால்); கடிய
உளக்காலன் -
கடினமான உள்ளமுடைய யமனின்; மனம்உட்கும் - மனமும்
பயப்படும்படியான; மணிவாயில் - மணிகள் பதிக்கப் பெற்ற கோபுரவாயிலின்
கண் உள்ள; இளக்கம் இல் - தளர்ச்சியில்லாத; கடற்படை இருக்கையை -
கடல்போன்ற படைகளின் இருப்பிடத்தை; எதிர்ந்தான் - எதிரே கண்டான்.

     இரவினில் வந்துஉயிர்க்குலத்தினை அழிக்கும் காலன் ஒளி வாயிலைக்
கண்டு அஞ்சினான் போலும் (பாரதி தந்த பிச்சை) சந்திரன் கீழ் வானில்
இருப்பதால் நகரில் இருள் சூழ்ந்தது. அதனால் விளக்கு இருளை விழுங்கிற்று
என்றார் கவிச்சக்கரவர்த்தி.                                  (71)

4906.

எவ்அமரர், எவ் அவுணர், ஏவர் உளர் - என்னே !-
கவ்வைமுதுவாயிலின் நெடுங்கடை கடப்பார் ?
தெவ்வர் இவர்;சேமம்இது; சேவகனும் யாமும்
வெவ்வமர்தொடங்கிடின் எனாய் விளையும் ?
                                    என்றான்.

     கவ்வை - ஆரவாரம் மிக்க;முதுவாயிலின் - பழமையான
கோபுரவாயிலின்; நெடுங்கடை - நீண்ட முற்றத்தை; கடப்பார் - கடந்து
செல்ல வல்லவர்கள்; எ அமரர் - எந்தத் தேவர்குழுவில்; எ அவுணர் -
எந்த அசுரர் குழுவில்; ஏவர் உளர் - எவர்கள் இருக்கின்றார்கள்; என்னே -
என்ன அதிசயம்; தெவ்வர் இவர் - பகைவர்கள் இத்தகையவர்; சேமம் இது
-
பாதுகாப்பு இத்தகையது (என்றால்); சேவகனும் யாமும் - இராமபிரானும்
யாங்களும்; வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும் - கொடிய
போரைத் தொடங்கினால் எதுவாக முடியுமோ; என்றான் - என்று (அனுமன்)
சிந்தித்தான்.