நெடுங்கடை -நீண்டமுற்றம் - ,முரசெய்து ! கடைத்தலை (பால- கையடை-10) (72) 4907. | கருங்கடல்கடப்பது அரிதுஅன்று; நகர் காவற் பெருங்கடல்கடப்பது அரிது; எண்ணம் இறைபேரின் அருங்கடன்முடிப்பது அரிதுஆம்; அமர் கிடைக்கின் நெருங்கு அமர்விளைப்பர் நெடுநாள் என நினைந்தான். |
கருங்கடல்கடப்பது - ஆழமான கடலைத்தாண்டுவது; அரிது அன்று- பெருஞ்செயல் அன்று; நகர் - நகரிலே அமைந்த; காவல் பெருங்கடல் -காவலாகிய பெரிய கடலை; கடப்பது அரிது - கடந்து செல்வதுபெருஞ்செயல்; எண்ணம் - என்னுடைய ஆலோசனை (உணர்வின் வயப்பட்டு); இறை பேரின் - சிறிது பிறழ்ந்தால்; அருங்கடன் - பிராட் டியைக்காண்பதாகிய கடமையை; முடிப்பது அரிது ஆம் - நிறைவேற்றுதல்முடியாமல்போம்; அமர் கிடைக்கின் - (இவர்கட்கு) போர் செய்யும்வாய்ப்புக்கிட்டினால்; நெடுநாள் - பலமாதங்கள்; நெருங்கு அமர் விளைப்பர்- செறிவான போரை வளர்ப்பார்கள்; என நினைந்தான் - என்று (அனுமன்)சிந்தித்தான். அனுமன் வீரன்ஆகையால் பகைவரைக் கண்டதும் உணர்ச்சி வயப்பட்டான். நிலைதெரிந்து அடங்கினான். ஆழக் கடல் கருமைநிறம் பெறும். ஆதலின் கருங்கடல் என்பதற்கு ஆழமான கடல் என்று கூறப்பெற்றது. (73) 4908. | வாயில்வழிசேறல்அரிது; அன்றியும் வலத்தோர்; ஆயில், அவர்வைத்தவழி ஏகல் அழகு அன்றால்; காய்கதிர்இயக்குஇல் மதிலைக் கடிது தாவிப் போய், இந்நகர்புக்கிடுவென், என்று ஓர் அயல்போனான். |
ஆயில் - ஆராய்ந்தால்; வாயில்வழி - இந்தக் கோபுர வாயிலின் வழியே; சேறல் அரிது - செல்வது கடினமானதாகும்; அன்றியும் - அல்லாமலும்; அவர் வைத்த வழி - அவர்கள் அமைத்த வழியில்; ஏகல் - செல்வது; வலத்தோர் - (எம்போல்) வலிமை யுடையவர்களுக்கு; அழகு அன்று - சிறப்பான செயல் அன்று (ஆதலினாலே); காய்கதிர் இயக்கு இல் - சூரியன் இயக்கம் இல்லாத (உயர்ந்த); மதில் - மதிலை; கடிது தாவிப் போய்- |