பக்கம் எண் :

116சுந்தர காண்டம்

     நெடுங்கடை -நீண்டமுற்றம் - ,முரசெய்து ! கடைத்தலை (பால-
கையடை-10)                                             (72)

4907.

கருங்கடல்கடப்பது அரிதுஅன்று; நகர் காவற்
பெருங்கடல்கடப்பது அரிது; எண்ணம் இறைபேரின்
அருங்கடன்முடிப்பது அரிதுஆம்; அமர் கிடைக்கின்
நெருங்கு அமர்விளைப்பர் நெடுநாள் என
                                 நினைந்தான்.

     கருங்கடல்கடப்பது - ஆழமான கடலைத்தாண்டுவது; அரிது அன்று-
பெருஞ்செயல் அன்று; நகர் - நகரிலே அமைந்த; காவல்
பெருங்கடல் -
காவலாகிய பெரிய கடலை; கடப்பது அரிது - கடந்து
செல்வதுபெருஞ்செயல்; எண்ணம் - என்னுடைய ஆலோசனை (உணர்வின்
வயப்பட்டு); இறை பேரின் - சிறிது பிறழ்ந்தால்; அருங்கடன் - பிராட்
டியைக்காண்பதாகிய கடமையை; முடிப்பது அரிது ஆம் -
நிறைவேற்றுதல்முடியாமல்போம்; அமர் கிடைக்கின் - (இவர்கட்கு) போர்
செய்யும்வாய்ப்புக்கிட்டினால்; நெடுநாள் - பலமாதங்கள்; நெருங்கு அமர்
விளைப்பர்-
செறிவான போரை வளர்ப்பார்கள்; என நினைந்தான் -
என்று (அனுமன்)சிந்தித்தான்.

     அனுமன் வீரன்ஆகையால் பகைவரைக் கண்டதும் உணர்ச்சி
வயப்பட்டான். நிலைதெரிந்து அடங்கினான்.

     ஆழக் கடல் கருமைநிறம் பெறும். ஆதலின் கருங்கடல் என்பதற்கு
ஆழமான கடல் என்று கூறப்பெற்றது.                         (73)

4908.

வாயில்வழிசேறல்அரிது; அன்றியும் வலத்தோர்;
ஆயில், அவர்வைத்தவழி ஏகல் அழகு அன்றால்;
காய்கதிர்இயக்குஇல் மதிலைக் கடிது தாவிப்
போய், இந்நகர்புக்கிடுவென், என்று ஓர்
                              அயல்போனான்.

     ஆயில் - ஆராய்ந்தால்; வாயில்வழி - இந்தக் கோபுர வாயிலின்
வழியே; சேறல் அரிது - செல்வது கடினமானதாகும்; அன்றியும் -
அல்லாமலும்; அவர் வைத்த வழி - அவர்கள் அமைத்த வழியில்; ஏகல் -
செல்வது; வலத்தோர் - (எம்போல்) வலிமை யுடையவர்களுக்கு; அழகு
அன்று -
சிறப்பான செயல் அன்று (ஆதலினாலே); காய்கதிர் இயக்கு இல் -
சூரியன் இயக்கம் இல்லாத (உயர்ந்த); மதில் - மதிலை; கடிது தாவிப்
போய்-