உளர். மா - மா -விளம் - மா - காய் என்னும் சீர்களை முறையே பெற்றுவரும் இந்த யாப்பை வடநூலார் ‘மத்தமயூரம்’ என்பர், இத்தகைய பாடல்கள் இந்நூலுள் 154 உள்ளன (மணிமலர் 76) (75) 4910. | எட்டுத்தோளாள், நாலு முகத்தாள்; உலகு ஏழும் தொட்டுப் பேரும்சோதி நிறத்தாள்; சுழல் கண்ணாள்; முட்டிப்போரில், மூவுலகத்தை முதலோடும் கட்டிச் சீறும்காலன் வலத்தாள்; கமை இல்லாள். |
எட்டுத் தோளாள்- எட்டுத்தோள்களையுடையவளும்; நாலு முகத்தாள் - நான்கு முகத்தையுடையவளும்; உலகு ஏழும் - ஏழு உலகத்தையும்; தொட்டுப் பேரும் - தீண்டி, அதற்கு மேலும் செல்கின்ற; சோதி - ஒளியைப் பெற்ற; நிறத்தாள் - மார்பை உடையவளும்; சுழல் கண்ணாள் - எல்லாப் பக்கத்திலும் சுழல்கின்ற கண்களையுடையவளும்; முட்டிப் போரில் - முட்டி யுத்தத்தில்; மூ உலகத்தை - மூன்று உலகங்களையும்; முதலோடும் கட்டி - உயிருடன் பிணித்து; சீறும் - கோபிக்கின்ற; காலன் வலத்தாள் - யமனின் வன்மையுடையவளும்; கமை இல்லாள் - பொறுமையற்றவளும். எட்டுத்தோள்முதலானவற்றைப் பெற்றவள் முட்டிப்போர் - முட்டியுத்தம் - இப்போரில் எதிரியைப் பிளத்தல் கண்கூடு. அவள் வலிமை - காலன் வலிமை. முதல் - ஆன்மா. (76) 4911. | பாரா நின்றாள், எண்திசை தோறும்; பலர் அப்பால் வாரா நின்றாரோ? என;மாரி மழையே போல் ஆரா நின்றாள்;நூபுரம் அச்சம் தரு தாளாள்; வேரா நின்றாள்;மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள். |
(அவள்) அப்பால் -நீண்ட தூரத்துக்கு அப்புறத்திலே; பலர் வாரா நின்றாரோ- பலர் வந்து கொண்டிருக்கிறார்களோ; என - என்று ஐயங்கொண்டு; எண்திசை தோறும் - எட்டுத் திக்குகளிலும்; பாரா நின்றாள் - நோக்கியவண்ணம் இருப்பவளும்; மாரி மழையே போல் - கார்கால மேகம் போல்;ஆரா நின்றாள் - முழங்கி நிற்பவளும்; அச்சம் தரு - பகைவர்களுக்குஅச்சத்தை விளைவிக்கும்; நூபுரம் |