பக்கம் எண் :

ஊர் தேடு படலம்119

தாளாள் - சிலம்பணிந்தபாதத்தையுடையவளும்; வேரா நின்றாள் -
கோபித்து நிற்பவளும்; இமைக்கும் மின்னின் - இமைக்கின்ற மின்னலைப்
போல; மிளிர் பூணாள் - ஒளிவிடுகின்ற ஆபரணம் அணிந்தவளும்.

     நின்றாள்,முதலானவை, இயல்பைக் காட்டி நின்றன. வேரா நின்றாள்
இதிலுள்ள வேரா - சினத்தைக் காட்டும். இமைத்தல் - இடையிட்டுத்
தோன்றுதல்.                                              (77)

4912.

வேல்,வாள், சூலம், வெங்கதை, பாசம், விளிசங்கம்
கோல், வாள்சாபம், கொண்ட கரத்தாள் வடகுன்றம்
போல்வாள், திங்கள்-போழின் எயிற்றாள், புகைவாயில்
கால்வாள்;காணின் காலனும் உட்கும்கதம் மிக்காள்.

     வேல் வாள் சூலம்- வேலும்வாளும் சூலமும்; வெங்கதை பாசம் -
கொடிய கதையும், பாசமும்; விளி சங்கம் - சேனைகளை அழைக்கின்ற
சங்கும்; கோல் வாள் சாபம் - அம்பும் கொடிய வில்லும்; கொண்ட
கரத்தாள் -
ஏந்திய கையையுடையவளும்; வடகுன்றம் போல்வாள் -
மேருமலையை ஒத்தவளும்;
திங்கள் போழின் -சந்திரனின் பிளவைப்
போன்ற; எயிற்றாள் -பற்களையுடையவளும்; வாயில் புகை கால்வாள் -
வாயில் புகையைக்கக்குபவளும்; காணின் - உற்றுப் பார்ப்பாளாயின்;
காலனும் உட்கும் -
யமனும் பயப்படும்; கதம் மிக்காள் - கோபம்
மிக்கவளும்.

     வாள் இருமுறை இக்கவிதையில் காட்சி தருகிறது. இரண்டாம் வாள்
கொடுமை எனும் பொருள் தருகிறது. கோல் ‘தோல்’ என்ற பாடம் ஒரு
பிரதியில் காணப்படுகிறது. தோல் - கேடயம், இப்பாடம் சிறக்கும்போலும்.

     போழ் - பிளவு. திங்கட்பிளவு - பிறைச்சந்திரன். காணில் - எமன்
செயலாக்கினும் அமையும்.                                 (78)

4913.

அஞ்சுவணத்தின் ஆடை உடுத்தாள்; அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின்வேகம் மிகுத்தாள் அருள்
                                  இல்லாள்
அம் சுவணத்தின்உத்தரியத்தாள் அலையாரும்
அம்சு வள்நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி
                                கொண்டாள்;+