பக்கம் எண் :

12சுந்தர காண்டம்

ஆழும் கலம் எனல்ஆயிற்று -மூழ்குகினற் கப்பல் என்று கூறும்
தன்மையைப் பெற்றது.

     அனுமன் கப்பலின்பாய்மரம் போன்றிருந்தான். அழுந்தும் மலை
கடலுள் ஆழும்கப்பல் போன்றிருந்தது. கூம்பு - பாய்மரம். வங்கத்தின்
கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (குலசேகரர் 5-5). கப்பலையும்
மலையையும் ஒப்பிடுதலைக் குறுந்தொகையில் காண்கிறோம். ‘வாழி தோழி
தெண்டிரைக் கடல் ஆழ் கலத்தில் தோன்றி - மாலை மறையும் அவர் மணி
நெடுங் குன்றே (குறு 240) அழுவம் - ஆழம் பரப்பும் ஆம்.        
(8)

4749.

தாதுஉகுநறுமென் சாந்தம்,
     குங்குமம்,குலிகம், தண்தேன்,
போதுஉகுபொலன்தாது, என்று இத்
    தொடக்கத்த யாவும் பூசி,
மீதுஉறு சுனைநீர்ஆடி,
     அருவிபோய் உலகின் வீழ்வ,
ஓதிய குன்றம்கீண்டு
    குருதிநீர்சொரிந்தால் ஒத்த.

     அருவி - மகேந்திரமலையின் அருவி; தாது - காவிக் கற்களையும்;
உகுநறுமென் சாந்தம் - கரைந்து தேய்ந்த நறுமணம் வீசும் சந்தனக்
குழம்பையும்; குங்குமம் - குங்குமப் பூக்களையும்; குலிகம் -
சாதிலிங்கத்தையும்; தண்தேன் -  குளிர்ந்த ; போதுஉகு - மலர்கள்சிந்திய;
பொலன்தாது - பொன் நிறம் பெற்ற மகரந்தங்களையும்; என்று இத்
தொடக்கத்த யாவும் -
இது முதலான பல பொருள்களையும்; பூசி -
தன்மேல் பூசிக் கொண்டு; மீதுறு - மலையின் மேலே உள்ள; சுனை நீர்அடி
-
சுனை நீரிலே குளித்து; உலகின் போய் வீழ்வ - பூமியில் பரந்து வீழும்
காட்சி; ஓதிய குன்றம் - பேசப்பெற்ற மலை; கீண்டு - வயிறு பிளக்கப்
பெற்று; குருதி நீர் சொரிந்தால் ஒத்த - இரத்தமாகிய நீரைச் சொரிவதைப்
போன்றிருந்தன.

     மணமுள்ளபொருள்களைப் பூசி நீராடுவார் போல அருவி, மகரந்தம்
முதலானவற்றைப் பூசிச் சுனையில் நீராடின. அது, நிலத்தில் பாயும்போது மலை
பிளந்து குருதி வீழ்வது போன்றிருந்தது. உகும் - கரைந்து தேயும். உப்பு இயல்
பாவை உறை உற்றதுபோல் உக்கு விடும், என் உயிர் என்னும் கலிப்பாவுக்கு
(நெய்தல் 21-16-17) உரை வகுத்த