பக்கம் எண் :

120சுந்தர காண்டம்

     அஞ்சு வணத்தின்- ஐந்துநிறங்களைப் பெற்ற; ஆடை உடுத்தாள்
-
சேலையை அணிந்தவளும்; அரவு எல்லாம் அஞ்சும் - எல்லாப்
பாம்புகளும்பயப்படும்படியான; உவணத்தின் -  கருடனைப் போல; வேகம்
மிகுத்தாள் -
மிக்க வேகம் உடையவளும்;  அருள் இல்லாள் -
 கருணையற்றவளும்; அம் - அழகிய; சுவணத்தின் உத்தரியத்தாள் -
பொன் இழையால் அமையப்பெற்ற மேலாக்கையுடையவளும்; அம் - நீர் நிரம்பிய; சுவள் நத்தின் -அழகாக ஒளி பொருந்திய சங்கிற்பிறந்த; முத்து
ஒளிர் -
முத்து விளங்கும்;ஆரத்து அணி கொண்டாள் - ஆரங்களால்
அழகு பெற்றவளும்.

     சுவணத்தின் முத்து- சுவணதேய முத்து என்று வரத நஞ்சையப்பர்
கூறுவார் - சுவர்ண தேயம், இலங்கை போலும்.                    (79)

4914.

சிந்துஆரத்தின் செச்சை அணிந்தாள்;தெளிநூல் யாழ்
அம்தா ரத்தின்நேர்வரு சொல்லாள்; அறைதும்பி
கந்தா ரத்தின்இன்இசை பன்னிக் களிகூரும்
மந்தா ரத்தின்மாலை அலம்பும் மகுடத்தாள்.

     சிந்து ஆரத்தின்- கடலில்தோன்றிய முத்துக்களால் ஆன; செச்சை
அணிந்தாள் -
சட்டை தரித்தவளும்; நூல் தெளி - நூல்களால் சிறந்தது
என்று முடிவு பண்ணிய; யாழ் - யாழின்கண் தோன்றிய; அம்தாரத்தின் -
அழகிய ‘தாரம்’ என்னும் சுரத்தை; நேர் வரு சொல்லாள் - ஒத்திருக்கும்
சொல்லையுடையவளும்; அறை தும்பி -  தேனுண்டு இசைபாடும்
வண்டுக்கூட்டங்கள்; இன் - இனிய; கந்தாரத்து இசை - காந்தாரம் என்னும்
பண்ணை; பன்னி - (பண்ணி) பாடி; களிகூரும் - மகி்ழ்ச்சியடையும்;
மந்தாரத்தின் - மந்தார மலர்களால் கட்டப்பெற்ற; மாலை அலம்பும் -
மாலை அசைகின்ற; மகுடத்தாள் - கீரிடத்தை அணிந்தவளும்.

    இன் இசை பண்ணி- இனிய இசையைப் பாடி மாலை மருதம் பண்ணி,
காலை --‘செவ்வழி பண்ணி’ என்றும் (புறம் 149) ’யாழோர் மருதம் பண்ண’
என்றும் (மதுரைக் 658) பெருக வந்த வழக்கு அருகின. பன்னி - என்று
மாற்றப் பெற்றது. ஒரு ஏடு (25) பண்ணி என்னும் பாடத்தை வழங்கிற்று,
வாழ்க.

    இப்பாடலின்பின்னிரண்டு அடிகளோடு சீவகசிந்தாமணியுள் “மந்தார
மாலை மலர் வேய்ந்து தீந்தேன், கந்தாரஞ் செய்து களிவண்டு