முரன்று பாட (சிந்.1959) என்னும் அடிகளையும் களிவண்டு மந்தார மாலையின் மலரை மொய்த்து அதிற்றேனை உண்டு மகிழ்ந்து காந்தாரம் என்னும் பண்ணையாக்கி ஆளாபனஞ் செய்து பாடும்படி”என வரும் உரைப் பகுதியையும் ஒப்பிடுக. (அண் - பல்கலை - கழ - பதிப்பு) அமைவண்டு -பெரும்பான்மையான பாடம், அமை -அழகு. (80) 4915. | எல்லாம்உட்கும் ஆழி இலங்கை இகல்மூதூர் நல்லாள்;அவ்ஊர் வைகுஉறை ஒக்கும் நயனத்தாள்; ‘நில்லாய்! நில்லாய்!’ என்று உரை நேரா நினையாமுன் வல்லேசென்றாள்; மாருதி கண்டான்; வருகஎன்றான். |
எல்லாம் உட்கும்- எல்லாஉயிர்க் கூட்டங்களும் பயப்படும்படியான; ஆழி இலங்கை - கடலாற் சூழப்பெற்ற இலங்கையாகிய பழமையான ஊர்க்கு; இகல் மூதூர் நல்லாள் - வலிமை மிக்க நன்மை செய்பவளும்; அ ஊர் வைகும் - அந்த இலங்கை தங்கும்; உறை ஒக்கும் நயனத்தாள் - உறை போன்ற கண்களையுடையவளும் ஆகிய இலங்கை மாதேவி; (அனுமனை நோக்கி) நில்லாய் நில்லாய் - நில், நில்; என்று உரை நேரா - என்று முழங்கி; நினையா முன் - (எதிரே வருவார் யார் என்று அனுமன்) எண்ணுவதற்கு முன்னே; வல்லே சென்றாள் - வேகமாக (அனுமன் முன்) போனாள்; கண்டான் மாருதி - அதைக் கண்ட அனுமன்; வருக என்றான் - வருவாயாக என்று கூறினான். ஆழி - கடற்கரை.ஆழி கடல் அரையா - சுந்தரர். பெருங்கடற்கு ஆழியனையன் (புறம் 330). சான்றாண்மைக்கு ஆழி எனப்படுபவர் (குறள் 989) அழகர் உரை. (81) 4916. | ஆகாசெய்தாய் ! அஞ்சலை போலும் ? அறிவுஇல்லாய்! சாகாமூலம் தின்றுஉழல்வார்மேல் சலம் என்னாம் ? பாகு ஆர்இஞ்சிப் பொன்மதில் தாவிப் பகையாதே, போகாய் என்றாள் - பொங்கு அழல் என்னப்புகை கண்ணாள். |
|