பக்கம் எண் :

122சுந்தர காண்டம்

     பொங்கு அழல்என்ன - மூண்டு எரிகின்ற நெருப்பைப் போல; புகை
கண்ணாள் -
புகையும் கண்களையுடைய இலங்கைத்தேவி; (அனுமனை
நோக்கி) அறிவு இல்லாய் - அறிவற்ற பேதையே; ஆகா செய்தாய் -
செய்யத் தகாதவற்றைப் புரிந்தாய்; அஞ்சலை - நீ சிறிதும் பயப்படவில்லை;
சாகா மூலம் தின்று -
இலைகளையும் கிழங்குகளையும் தின்று; உழல்வார்
மேல் -
திரிகின்ற அற்பக்குரங்குகள் மேல்; சலம் என்னாம் - கோபம்
கொள்வதால் என்ன பயன்; பாகு ஆர் - சுண்ணக்குழம்பு பூசப்பெற்ற;
இஞ்சிப் பொன்மதில் - கோட்டையொடு கூடிய மதிலை; தாவிப் பகையாதே- கடந்து சென்று (என்னுடன்) பகைத்துக் கொள்ளாதே; போகாய்
-
ஓடிப்போவாயாக; என்றாள் - என்று கூறினாள்.

     சாகம் - இலை.‘அருந்தவத்தின் சாகம் தழைத்து’ (கம்ப. 1671)
பகையாதே போகாய் - பகையாமல் செல்க, என்றும் கூறலாம். பகையாதே
என்பது ஏவலாகவும் எதிர் மறைப் பெயர் எச்சமாகவும் வரும்.                                                   (82)

அனுமனும் இலங்கைத்தேவியும் உரையாடுதல்

4917.

களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம்மூள
விளியா நின்றே,நீதி நலத்தின் வினை ஓர்வான்,
‘அளியால் இவ்ஊர் காணும் நலத்தால்
                            அணைகின்றேன்;
எளியேன்உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு ?’
                             என்றான்.

     நீதி - நீதியுடன்ஒன்றுபட்ட; நலத்தின் வினை - நன்மையின் பயனை;
ஓர்வான் -
 அறிந்தவனும்; களியா -  செருக்கடையாத; உள்ளத்து
அண்ணல் -
உள்ளத்தைப் பெற்றவனுமான அனுமன்; மனத்தில் கதம்மூள -
கோபத்தீ மூண்டு எரிய; விளியா நின்று - (அதனை) அழித்து (இலங்கைத்
தேவியைப் பார்த்து);  இ ஊர் - இந்த ஊரை; நலத்தால் - இந்நகரின்
அழகால்; காணும் அளியால் - காணவேண்டும் என்னும் ஆசையால்;
அணைகின்றேன் -
அடைந்துள்ளேன்; எளியேன் - பலமில்லாத யான்;
இங்கு உற்றால் -
இவ்விடத்தை அடைந்தால்; உனக்கு இழவு யாது -
உனக்கு நேரும் நட்டம் யாது; என்றான் - என்று அமைதியாகப் பேசினான்.