பக்கம் எண் :

ஊர் தேடு படலம்123

     இவ்வூர், நீதிநலத்தின் வினை ஓர்வான் - அணைகின்றேன் என்று ஒரு
தொடராக்கி இந்த ஊரின் நீதியையும் அழகையும் ஆராய வந்துள்ளேன் என்று
உரை கூறுவதும் நன்றே.

      நலத்தால் -இன்பத்துடன் - நல் எண்ணத்தால் (அண். பல்கலை பதிப்பு)                                                 (83)

4918.

என்னாமுன்னம், ‘ஏகு’ என, ஏகாது, எதிர்மாற்றம்
சொன்னாயே ? நீயாவன் அடா ? தொல்புரம்
                                 அட்டான்
அன்னாரேனும்அஞ்சுவர், எய்தற்கு;
அளியுற்றால்
உன்னால் எய்தும்ஊர்கொல் இவ்ஊர், என்று,
                                 உறநக்காள்.

     என்னா முன்னம் -என்றுஅனுமன் கூறுவதற்கு முன்னே;
(இலங்கைத்தேவி
அனுமனை நோக்கி) ஏகு என - நான், ‘போ’ என்று
கட்டளையிடவும்; ஏகாது - போகாமல்; எதிர் மாற்றம் சொன்னாயே -
எதிர் மொழி பேசுகிறாயே; அடா - அற்பனே; நீ யாவன் - நீ யார்?; தொல்
-
பழமையான; புரம் அட்டான் அன்னாரேனும் - முப்புரம் எரித்த
சிவபிரான் போன்றவர்களும்; எய்தற்கு - என்முன் வருவதற்கு; அஞ்சுவர் -
பயப்படுவார்கள் (அப்படியிருக்க); அளி உற்றால் - ஊரைக் காண வேண்டும்
என்னும் ஆசை உனக்கு வந்தால்; இவ் ஊர் - இந்த இலங்கை; உன்னால்
எய்தும் ஊர்கொல் -
 உன்னால் அடையத்தக்க எளிய ஊரா? என்று -
என்று கூறி; உற நக்காள் - மிகுதியாகச் சிரித்தாள்.

     எய்துதற்கு -(இந்த நகரை) அடைய என்னும் பொருள் கூறப்பெற்றது.
                                                         (84)

4919. 

நக்காளைக்கண்டு ஐயன் மனத்து ஓர்நகை
                               கொண்டான்;
நக்காய்,நீயார் ? ஆர்சொல வந்தாய் ? உனது ஆவி
உக்கால் ஏதுஆம்? ஓடலை ? என்றாள் இனி இவ்வூர்
புக்கால் அன்றிப் போகலென் என்றான் புகழ்
                              கொண்டான்.

     ஐயன் - ஒப்பற்ற அனுமன்;நக்காளைக் கண்டு - சிரித்த இலங்கைத்
தேவியைப் பார்த்து; மனத்து - உள்ளத்துக்குள்ளே; ஓர் நகை கொண்டான்
-
சிரித்துக் கொண்டான்; (அப்போது