பக்கம் எண் :

126சுந்தர காண்டம்

 

ஒடித்தான்கையால் - உம்பர் உவப்ப, உயர்காலம்
பிடித்தாள்நெஞ்சம் துண்ணென, - எண்ணம்
                                 பிழையாதான்.

     எண்ணம்பிழையாதான் -நினைவாலும் தவறு செய்யாத அனுமன்;
உம்பர் உவப்ப -
தேவர்கள் மகிழும்படி; உயர்காலம் பிடித்தாள் - சிறந்த
பாசத்தைப் பற்றிய இலங்கைத்தேவி; துண் என - திடுக்கிடும்படியாகவும்;
தடித்து ஆம் என்ன -
மின்னலே ஒப்பு என்று கூறும்படி; தன் எதிர்
செல்லும்  -
தன் முன்னே வரும்; தழல்வேலை - நெருப்பைக் கக்கும்
வேலாயுதத்தை; கடித்தான் - பற்களால் கடித்து; கையால் - கைகளால்;
விண்ணில் -
 ஆகாயத்தின்கண்; நாகம் - பாம்புகளை; முரிக்கும்
கலுழன்போல் -
முறிக்கின்ற கருடனைப் போல; ஒடித்தான் - துண்டு
துண்டாகச் சிதைத்தான்.

     காலம் - பாசம்.“சூலம் எனில் அன்று. இது தொல்லை வரும் காலம்’
(கம்ப . 8378) அண் - கழகம்) காலம் பிடித்தாள் - அச்சூலத்தை நீண்ட
காலம் பிடித்தவள் என்று கூறப் பெற்றவுரை நன்றேல் கொள்க. காலம்
பிடித்தாள் (என்பதை) - சூலம் பிடித்தான் என்று பாடபேதம் செய்தாரும்
உளர்.                                                 (88)

4923.

இற்றுச்சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள்
மற்றும் தெய்வப்பல்படை கொண்டே மலைவாளை
உற்றுக் கையால்ஆயுதம் எல்லாம் ஒழியாமல்
பற்றிக்கொள்ளா விண்ணில் எறிந்தான்,
                              பழிஇல்லான்.*

     சூலம் - அனுமன் மேல் ஏவியசூலப்படை; இற்று - முறிந்து;
(அதனால்) நீறு எழல் காணா - புழுதி கிளம்புவதைப் பார்த்து; எரி ஒப்பாள்-  நெருப்பைப் போன்று சீறி; மற்றும் - பிறகும்; பல்தெய்வப்
படைகொண்டு -
பலவிதமான தெய்வீகப்படைகளைக் கொண்டு;
மலைவாளைஉற்று -
போர் செய்யும் இலங்கைத் தேவியை அணுகி;
பழிஇல்லான் -
பழியற்றவனாகிய அனுமன்; கையால் - தன்னுடைய
கைகளால்; ஆயுதம்எல்லாம் - எல்லா ஆயுதங்களையும்; ஒழியாமல் -
தப்பாமல்;
பற்றிக் கொள்ளா -கவர்ந்துகொண்டு (அவள் மேல் வீசாமல்);
விண்ணில்எறிந்தான் -
ஆகாயத்தில் வீசி எறிந்தான்.

     சூலம் பொடியாகிஅதனால் புழுதி எழுவதைக் கண்டு நெருப்புப் போற்
சினங் கொண்டு இலங்கைத் தேவி வேறு படைகளைக் கொண்டு