போரிட அனுமன் அவள்போர்க்கு வராதபடி ஆயுதங்களைப் பறித்து விண்ணில் எறிந்தான். நீறு - சூலம்முறித்த அதிர்ச்சியால் உண்டான புழுதி. சூலம் இற்றதே அன்றிப் பொடியாகவில்லை. ‘பழி ஓர்வான்’என்று பாடம் கொண்டு பெண்ணைக் கொல்வதால் உண்டாம் பழியை நினைத்துப் படைக்கலங்களை விண்ணில் எறித்து அவளைக் கொல்லாது விட்டான் எனல் சிறப்புடைத்து. (89) 4924. | வழங்கும்தெய்வப் பல்படை காணாள், மலைவான்மேல் முழங்கும் மேகம்என்ன முரற்றி முனிகின்றாள்- கழங்கும் பந்தும்குன்றுகொடு ஆடும் கரம் ஓச்சித் தழங்கும்செந்தீச் சிந்த அடித்தாள் - தகவு இல்லாள். |
தகவு இல்லாள் -நற்பண்புஅற்ற இலங்கைத் தேவி; வழங்கும் - பகைவர் மேல் எறியும்; பல்தெய்வப் படை - பலவிதமான தெய்வீகப் படைகள்; காணாள் - சிதறிய இடங்களை அறியாமல்; வான்மலைமேல் - வானம் அளாவிய மலையின்மேல்; முழங்கும் - இடிக்கின்ற; மேகம் என்ன - மேகத்தை ஒப்ப; முரற்றி - கர்ச்சித்து; முனிகின்றாள் - சீற்றங்கொண்டு; குன்று - மலைகளை; கழங்கும் பந்து கொடு - கழற்சிக் காய்களாகவும் பந்துகளாகவும் பாவித்துக் கொண்டு; ஆடும் - விளையாடுகின்ற; கரம் ஓச்சி - கைகளை உயரத் தூக்கி; தழங்கும் செந்தீ - முழங்குகின்ற தீயானது; சிந்த - சிதறும்படி; (அனுமனை) அடித்தாள் - தாக்கினாள். அமைதியானமலையில் மேகம் இடிப்பதுபோல் அனுமனை இலங்கைத் தேவி அடித்தாள். மலை, வான் - வான் மலை எனக் கூட்டுக. வானத்தில் முழங்கும் மேகம் என்று சிலர் உரை கூறின் ஆய்க. மழைவான்மேல் என்று பாடம் கொண்ட வரும் உளர். (90) 4925. | அடியாமுன்னம் அம்கை அனைத்தும் ஒருகையால் பிடியா ‘என்னே?பெண்இவள்; கொல்லின் பிழை’என்னா, ஒடியா நெஞ்சத்துஓர்அடி கொண்டான், உயிரோடும் இடியேறு உண்டமால்வரைபோல், மண்ணிடை வீழ்ந்தாள். |
|